Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை பங்குச் சந்தை 14,734ஐ எட்டியது

Webdunia
திங்கள், 2 ஜூலை 2007 (14:19 IST)
திங்கட்கிழமை துவங்கிய வணிகத்தில் வங்கி, கனிமப் பொருட்கள், கச்சாப் பொருட்கள் போன்றவற்றின் விலை உயர்வால் மும்பை பங்குச் சந்தை குறியீடு 84.12 புள்ளிகள் உயர்ந்து 14,734.63 புள்ளிகளைத் தொட்டது.

மும்பை பங்குச் சந்தை கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி 14,723.88 புள்ளிகளை எட்டியதே இதுவரை அதிக உயர்வாக இருந்தது. ஆனால் இன்றோ 84.12 புள்ளிகள் உயர்ந்து 14,734 ஐ எட்டியுள்ளது.

பங்குச் சந்தையில் கச்சாப் பொருட்கள், வங்கிகள், கனிமப் பொருட்களின் பங்குகள் மீதான விலை உயர்ந்ததை அடுத்தே மும்பைப் பங்குச் சந்தை குறியீடு உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே தேசியப் பங்குச் சந்தையிலும் நிஃப்டி குறியீடு 18 புள்ளிகள் உயர்ந்து 4,336 புள்ளிகளாகக் காணப்பட்டது
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

Show comments