Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் கடும் சரிவு!

Webdunia
புதன், 6 ஜூன் 2007 (20:41 IST)
வங்கிகள், வாகன நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகள் பெருமளவிற்கு விற்கப்பட்டதன் காரணமாக மும்பை, தேச பங்குச் சந்தைகளின் குறியீடு இன்று கடும் சரிவைச் சந்தித்துள்ளது!

இன்று காலை வணிகத்தில் 55 புள்ளிகள் உயர்ந்த மும்பை பங்குச் சந்தை குறியீடு, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தங்களுடைய பங்குகளை விற்றதன் காரணமாக சரியத் துவங்கியது.

இன்றைய வணிகத்தின் இறுதியில் 279.08 புள்ளிகள் சரிந்து 14,255.93 புள்ளிகளாக முடிந்தது. தேச பங்குச் சந்தை குறியீடு 86.40 புள்ளிகள் சரிந்து 4,198.25 புள்ளிகளாகக் குறைந்தது.

கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து உயர்ந்து வந்ததால் இந்தச் சரிவு எதிர்பார்க்கப்பட்டதுதான் என்று தேச பங்குச் சந்தை தரகர் ஒருவர் கூறியுள்ளார்.

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் தனது உற்பத்தியை கணிசமாகக் குறைக்கப் போவதாக வெளியிட்ட அறிவிப்பும், வாகன பங்குகளில் ஏற்பட்ட சரிவிற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. (பி.டி.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

Show comments