பார்தி ஏர்டெல் லாபம் 45% உயர்வு

Webdunia
வியாழன், 24 ஜூலை 2008 (16:21 IST)
நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் லிமிடெட், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் முதலாவது காலாண்டில் 2 ஆயிரத்து 46 கோடியே 79 லட்சம் ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது 44.86 சதவீதம் உயர்வாகும்.

நிறுவனத்தின் மொத்த வருவாய் 39.72 சதவீதம் உயர்ந்து 7 ஆயிரத்து 952 கோடியே 32 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது, இது கடந்த ஆண்டு இதேகாலத்தில் 5 ஆயிரத்து 691 கோடியே 45 லட்சம் ரூபாயாக இருந்தது என்று பார்தி ஏர்டெல் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

பார்தி ஏர்டெல் குழுமத்தின் மொத்த இலாபம் 2 ஆயிரத்து 166 கோடியே 68 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டு இதேகால கட்டத்தில் ஒரு லட்சத்து 424 கோடியே 22 லட்சம் ரூபாயாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழுமத்தின் நிகர லாபம் சுமார் 52.13 சதவீதம் உயர்ந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலால் தவழ்ந்து காலை வாரிவிட்டு ஆட்சிக்கு வந்தவர்!.. பழனிச்சாமியை விளாசிய ஸ்டாலின்..

மீண்டும்.. மீண்டும்!.. விஜய்க்கு பல கட்டுப்பாடுகளை விதித்த புதுச்சேரி போலீஸ்!...

விஜய் பவுன்சர்களிடம் வாக்குவாதம் செய்த செய்தியாளர்கள்.. திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு!..

ஒரே ஒரு நாள் தான் ஏற்றம்.. மீண்டும் தலைகீழாக சரிந்த பங்குச்சந்தை..

டிரம்ப் நிறுவனத்துடன் கிரிப்டோ ஒப்பந்தம் செய்த பாகிஸ்தான்.. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புதிய திட்டமா?

Show comments