Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடமாடும் தா‌னிய‌ங்‌கி பண‌ப்ப‌ட்டுவாடா மைய‌ம்

Webdunia
வியாழன், 24 ஜூலை 2008 (15:25 IST)
எச்டிஎஃப்சி வங்கி‌யி‌ன் நடமாடும் தானியங்கி பணப்பட்டுவாடா மையத்தை (ஏடிஎம்) கோவையில் அடுத்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளது.

கிராமப் பகுதிகளில் பணம் செலுத்துவது மற்றும் பணம் பெறுவதற்கான வசதிகளை உள்ளடக்கியதாக இந்த நடமாடும் தா‌னிய‌ங்‌கி பண‌ப்ப‌ட்டுவாடா மைய‌‌ம் இருக்கும். இதனால் கிராம மக்கள் பணங்களை செலுத்துவது மற்றும் தேவையான பணத்தை எடுத்துக் கொள்வது எளிதாக இருக்கும்.

மாதத்தின் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட பகுதிக்கு இந்த நடமாடும் தா‌னிய‌ங்‌கி பண‌ப்ப‌ட்டுவாடா மைய‌‌‌ங்கள் கொண்டு செல்லப்படும். இதன் மூலம் கிராமமக்கள் தாங்கள் வாழும் பகுதியிலேயே வங்கிச் சேவையைப் பெற முடியும் என்று வங்கியின் சிறு வணிகக் கடன் பிரிவின் துணைத் தலைவர் மனோகர் ராஜ் தெரிவித்தார்.

தற்போது உள்ள தா‌னிய‌ங்‌கி பண‌ப்ப‌ட்டுவாடா மைய‌‌ங்களில் பணத்தை எடுக்கும் வசதி மட்டுமே உள்ளது. இந்த நடமாடும் தா‌னிய‌ங்‌கி பண‌ப்ப‌ட்டுவாடா மைய‌த்‌தி‌ல் பணத்தை எடுப்பதோடு மட்டுமின்றி செலுத்தும் வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வசதி பின்னர் படிப்படியாக பிற கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments