Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் அதிவேக கணினி-அமெரிக்கா சாதனை!

Webdunia
செவ்வாய், 10 ஜூன் 2008 (10:25 IST)
அமெரிக்க ஆயுதங்கள் பரிசோதனை மையம் உலகின் அதிவேக கணினியை தயாரித்துள்ளது.

ஒரு வினாடியில் 1000 ட்ரில்லியன் நடவடிக்கைகளை இந்த சாதனைக் கணினி செய்து முடிக்கும் திறன் கொண்டது.

அமெரிக்க எரிசக்தித் துறையும் ஐ.பி.எம். நிறுவனமும் இந்த சூப்பர் கணினி பற்றிய அறிவிப்பை நேற்று வெளியிட்டது.

" ரோட்ரன்னர்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த கணினி, அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் கையிருப்பை பராமரிக்கவும், உலக எரிசக்தி நெருக்கடிகளை தீர்க்க உதவவும், மேலும் பல்வேறு அடிப்படை ஆராய்ச்சி மூலம் அறிவுத் துறையை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் என்று எரிசக்தி செயலர் சாமுயேல் போட்மேன் தெரிவித்தார்.

நியூ மெக்சிகோவில் உள்ள 'தி லாஸ் அலமோஸ் நேஷனல் பரிசோதனைக் கூடமும், ஐ.பி.எம். நிறுவனமும் இந்த அதிவேக உலக சாதனை கணினியை வடிவமைக்கும் பணியில் கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments