விமானத்தில் ஏதேனும் விபத்து நிகழ்ந்தால், அந்த விபத்து குறித்த முக்கிய தகவல்களை நிஜத்தை கூறும் கருவியாக இருப்பதுதான் கறுப்பு பெட்டி. கறுப்பு பெட்டி என்பது, "ஈவென்ட் டேட்டா ரெக்கார்டர்" அதாவது, நடந்த நிகழ்வுகளை பதிவு செய்ய பயன்படுவது. இது தற்சமயம் கார்களில் வரப்போகிறது என்பது ஆச்சரியமான விஷயம். இதன் மூலம், கார்களில் ஏற்படும் விபத்துகளின் உண்மையான காரணம், இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உண்மையை விளக்கும் கருவியாக, போலீஸ் விசாரணையின்போது நீதிமன்றங்களில், கறுப்பு பெட்டி ஓர் சாட்சியாக செயல்படக்கூடிய முக்கியமான கருவி ஆகும்.
காரில் கறுப்பு பெட்டி பொருத்துவதன் பயன் குறித்த ஆய்வில், கறுப்பு பெட்டி பொருத்திய கார்களில், ஓட்டுனர்களால் 10 சதவீதம் அளவு விபத்துகள் குறைந்துள்ளது என அறியப்பட்டுள்ளது.