Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

Webdunia
ஞாயிறு, 4 ஜூலை 2010 (13:25 IST)
நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ஜுன் 25-ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 101.10 கோடி டாலர் அதாவது, ரூ.4,651 கோடி அதிகரித்து 27,698 கோடி டாலராக அதாவது ரூ.12,74,108 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் இது 318.60 கோடி டாலர் அதிகரித்து 27,596.90 கோடி டாலராக இருந்தது. அன்னியச் செலாவணி கையிருப்பு, தொடர்ந்து மூன்று வாரங்களாக உயர்ந்து வருகிறது.

அன்னியச் செலாவணி கையிருப்பில், இதர நாட்டுச் செலாவணிகள், தங்கம், எஸ்.டீ.ஆர்., பன்னாட்டு நிதியத்திடம் உள்ள இருப்பு நிதி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

கணக்கீடு செய்வதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வாரத்தில், அமெரிக்க டாலருக்கு எதிராக யுரோ, யென், பவுண்டு உள்ளிட்ட இதர நாட்டுச் செலாவணிகள் மதிப்பு உயர்ந்தது.

இதனையடுத்து, இவற்றின் மதிப்பு 101.30 கோடி டாலர் அதிகரித்தது. எஸ்.டீ.ஆர். மதிப்பு 20 லட்சம் டாலர் சரிவடைந்தது. தங்கம் மற்றும் பன்னாட்டு நிதியத்திடம் வைத்துள்ள இருப்பு நிதி ஆகியவற்றின் மதிப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போராட்டம் நடத்துங்க!? இந்த 3 மாவட்டங்கள் முதல் டார்கெட்! - தவெக விஜய் அதிரடி!?

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

மும்மொழி மட்டுமல்ல, 10 மொழிகளை மாணவர்களுக்கு ஊக்குவிப்பேன்: சந்திரபாபு நாயுடு..!

பிளஸ் 1 தேர்விலும் தமிழ் பாடத்தை எழுத வராத மாணவர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

Show comments