Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி துறைமுகம் சாதனை

Webdunia
வெள்ளி, 30 ஜனவரி 2009 (11:57 IST)
தூத்துக்குடி துறைமுகம் ஒரே நாளில் அதிக அளவு யூரியா, மரத்தடிகள் இறக்குமதி செய்து சாதனை படைத்துள்ளது.

தூத்துக்குடி துறைமுகம் சென்ற 21, 25 ஆகிய தேதிகளில் சரக்குகள் கையாளுவதில் புதிய சாதனை படைத்துள்ளது.

வ.உ.சி. மூன்றாவது தளத்தில் சென்ற 21 ஆம் தேதி எம்.வீ. ஹேஞ்சீன் என்ற கப்பலில் இருந்து 9,312 டன் யூரியாவை ஒரே நாளில் இறக்குமதி செய்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்த யூரிய ா, மும்பையை சேர்ந்த ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அன்ட் பெர்ட்டிலைசர்ஸ் என்ற நிறுவனத்தால் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும்.

இதில் கப்பல் முகவராக இண்டர் ஓசன் ஷிப்பிங் நிறுவனமும ், ஸ்டிவிடோராக ஆஸ்பின்வால் நிறுவனமும் செயல்பட்டன.

இதற்கு முன்பு 2007 ஜுன் மாதம் 23 ஆம் தேதி எம்.வீ. ஸ்டார் கெனோபஸ் என்ற கப்பலில் இருந்து 8,069 டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

இதே போல் சென்ற 25 ஆம் தேதி நியூசிலாந்தில் இருந்து 5,016 டன்கள் அன்னாசி மரத்தடிகளை எட்டாவது கப்பல் தளத்தில் எம்.வீ. கிரேட் கெய்ன் என்ற கப்பலில் இருந்து ஒரே நாளில் இறக்கி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இது ஜனவரி மாதம் 5 ஆம் தேதி அன்று, எம்.வீ. ஷாங் யீ கப்பலில் இருந்து ஒரே நாளில் கையாளப்பட்ட 3,633 மரத்தடிகளைவிட கூடுதலாகும்.

இதில ், கப்பல் முகவராக பரேக் மெரைன் ஏஜென்சிஸ் நிறுவனமும ், ஸ்டிவிடோராக செயின்ட் ஜான் நிறுவனமும் செயல்பட்டன என்று தூத்துக்குடி துறைமுக சபை தலைவர் கு.ஜெ. ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்.! கோவையில் பரபரப்பு..!!

நள்ளிரவில் நடக்கும் அசம்பாவிதங்கள்: விஜயகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு கேட்டு மனு..!

Show comments