Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்யம் நிறுவனத்திற்கு நிதியுதவி அளிக்கும் திட்டமில்லை: மத்திய அரசு

Webdunia
வியாழன், 15 ஜனவரி 2009 (15:15 IST)
ராமலிங்க ராஜு செய்த முறைகேடுகள் காரணமாக நிதிப்பற்றாக்குறையால் தவிக்கும் சத்யம் நிறுவனத்திற்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என தொழில்துறை இணையமைச்சர் அஷ்வனிகுமார் தெரிவித்துள்ளார்.

தலைநகர் புதுடெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்த அமைச்சர் அஷ்வனிகுமார், நிதியுதவி கோருவது குறித்து புதிதாக அமைக்கப்படவுள்ள சத்யம் நிறுவனத்தின் வாரியக் குழுதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
சத்யம் நிறுவனத்தின் நிதி மோசடி காரணமாக இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என தாம் நம்புவதாகவும் அமைச்சர் அஷ்வினிகுமார் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலர் சஸ்பெண்ட் ரத்து.. ஆனால் பணியிட மாற்றம்..!

கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் திடீர் ராஜினாமா! என்ன காரணம்?

Show comments