சோயா எண்ணெய் முன்பேர தடை நீக்கம்

Webdunia
திங்கள், 1 டிசம்பர் 2008 (12:26 IST)
புதுடெல்ல ி: உருளைக் கிழங்கு, சோயா எண்ணெய், கொண்டக்கடலை, ரப்பர் ஆகியவைகளுக்கு முன்பேர சந்தையில் வர்த்தகம் நடத்த இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கடந்த மே மாதம் 6 ஆம் தேதி உருளைக் கிழங்கு, சோயா எண்ணெய், கொண்டக்கடலை, ரப்பர் ஆகியவற்றிற்கு முன்பேர சந்தையில் (ஃப்யூச்சர்) வர்த்தகம் செய்வதற்கு முதலில் 4 மாதங்களுக்கு தடை விதித்தது.

பிறகு இந்த தடை நவம்பர் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது.

முன்பேர சந்தையை கட்டுப்படுத்தும் பார்வெர்ட் மார்க்கெட் கமிஷனிடம் இருந்து, இந்த நான்கு பொருட்களின் வர்த்தகத்திற்கு தடை நீடிக்கப்படுவதாக எவ்வித அறிவிப்பும் வரவில்லை. எனவே இதன் மீதான தடை நவம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்ததாக கருத வேண்டியதுள்ளது என்று உயர் அதிகாரி தெரிவித்தார்.

அதே நேரத்தில் கோதுமை, நெல், உளுந்து, துவரம் பருப்பு ஆகியவைகளுக்கான தடை நீடிக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

Show comments