Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நபார்டு வங்கிக் கடன் திட்ட அறிக்கை வெளியீடு

Webdunia
சனி, 29 நவம்பர் 2008 (18:59 IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2009-10 ஆம் ஆண்டுக்கு ரூ.1487.13 கோடி கடன் வழங்குவதற்கு சாத்தியக் கூறுகள் உள்ளதாக நாபர்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் மாவட்ட வங்கி அலுவலர்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நபார்டு அடுத்த ஆண்டுக்கான வங்கிக் கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.

இதை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரகுமார் வெளியிட்டார். முதல் பிரதியை முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் என். சுவாமிநாதன் பெற்றுக் கொண்டார்.

நபார்டு வங்கியின் உதவிப் பொது மேலாளர் இரா. சங்கர் திட்ட அறிக்கை பற்றி விளக்கினார்.

இதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2009-10 ஆம் ஆண்டுக்கு ரூ.1487.13 கோடி கடன் வழங்குவதற்கு சாத்தியக் கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறுகிய காலக் கடன் ரூ.291.75 கோடி, முதலீட்டு விவசாயக் கடன் ரூ.288.45 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பண்ணை சாராத் தொழிலுக்கு ரூ.176.15 கோடி, இதர முன்னுரிமை கடன்களுக்கு ரூ.725.55 கோடி, உணவுப் பொருள் பதப்படுத்தலுக்கு ரூ.5.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நில மற்றும் நீர்வளம ், வேளாண் இயந்திரங்கள ், தோட்டப் பயிர ், மருத்துவப் பயிர ், வன மேம்பாட ு, ஆட ு, மாட ு, கோழ ி, மீன் வளர்ப்பு என 16 பகுதிகளாக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் சுய உதவிக் குழுக்கள ், மகளிர் திட்டம ், மாவட்ட தொழில் மையம் மற்றும் ஏனைய அரசு சார் நிறுவனங்களின் பணிகள் பற்றிய திட்டங்களும் விளக்கப்பட்டுள்ளன.

இந்த திட்ட அறிக்கையின் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வங்கிகள், கடன் வழங்குவது பற்றிய திட்டங்களை தயாரிக்கும்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் சக்திவேல ், மகளிர் திட்ட அலுவலர் தெய்வநாயக ி, முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments