Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருளைக்கிழங்கு கமிஷன் குறைப்பு!

Webdunia
புதன், 1 அக்டோபர் 2008 (15:52 IST)
உதக ை: மேட்டுப்பாளையத்தில் இயங்கும் உருளைக்கிழங்கு கமிஷன் மண்டியில் அக்டோபர் 1ஆம் தேதி முதல ் 4 விழுக்காடு கமிஷன் தொகை மட்டுமே வசூலிக்கப்படுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை நீலகிரி உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நீலகிரி உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு பயிர் சாகுபடிக்காக செய்யும் செலவு மற்ற மாவட்டங்களைவிட கூடுதலாக உள்ளது.

மேலும் விவசாயிகளின் விளை பொருட்களை மேட்டுப்பாளையத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் போத ு, உருளைக்கிழங்கிற்கு 7 விழுக்காடு கமிஷன் வசூலிக்கப்பட்டு வந்தது.

நீலகிரி விவசாயிகளின் சாகுபடி செலவ ு, கமிஷன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் மேட்டுப்பாளையத்தில் இயங்கும் என்.சி.எம்.எஸ் நிர்வாகம் உருளைக்கிழங்கிற்கு 4 விழுக்காடு கமிஷன் மட்டும் வசூலிக்குமென கூட்டுறவுத்துறை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் உதகையிலுள்ள என்.சி.எம்.எஸ் வளாகத்தில் தினசரி விற்பனை செய்யும் காய்கறிகளுக்கும் கமிஷன் தொகையாக 3 விழுக்காடு மட்டுமே வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட விவசாயிகள் இந்த சலுகையினை பெற்று பயனடைய வேண்டும். மேட்டுப்பாளையம் என ். ச ி. எம ். எஸ் சந்தையில் 4 விழுக்காடு கமிஷனை மட்டுமே செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

Show comments