Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு விற்பனை!

Webdunia
சனி, 23 ஆகஸ்ட் 2008 (13:54 IST)
மத்திய அரசுக்கு சொந்தமான பி.இ.சி. லிமிடெட் ( Projects -Equipments-Commodities Limited) இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு வகைகளை விற்பனை செய்ய உள்ளது. இதற்கான விலைப்புள்ளிகளை மொத்த வியாபாரிகளிடம் இருந்து கோரியுள்ளது.

இது விற்பனை செய்ய உள்ள பருப்பு வகை பற்றிய விபரம் வருமாறு :

துவரம் பருப்பு 3,064 டன், கொண்ட கடலை (சென்னா) 1,947 டன், உளுந்து 3,665 டன், பயத்தம் பருப்பு 35 டன், மைசூர் பருப்பு 7.5 டன். இவை மும்பை, சென்னையில் உள்ள கிடங்குகளில் உள்ளன.

இதற்கான விலைப்புள்ளி சமர்பிக்க கடைசி நாள் 26-08-08 மதியம் 3 மணி.

பட்டாணி விற்பன ை!

இதே போல் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பட்டாணி விற்பனை செய்வதற்கும் மொத்த வியாபாரிகளிடம் இருந்து விலைப்புள்ளிகளை கேட்டுள்ளது.

இது மும்பையில் உள்ள கிடங்குகளில் 14,742 டன் இருப்பில் உள்ளது. தூத்துக்குடியில் உள்ள 10,861 டன் இருப்பில் உள்ளது. இதை வாங்க விரும்பும் வியாபாரிகள் குறைந்த பட்சம் 3 ஆயிரம் டன்னுக்கு விலைப்புள்ளி சமர்ப்பிக்க வேண்டும்.

விலைப்புள்ளிகளை 26-08-08 நண்பகல் 2.45 மணி வரை சமர்ப்பிக்கலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments