Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எகிப்துக்கு தேயிலை ஏற்றுமதி அதிகரிக்க முயற்சி!

Webdunia
புதன், 13 ஆகஸ்ட் 2008 (17:47 IST)
இந்தியாவில் இருந்து எகிப்துக்கு 200 லட்சம் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யும் முயற்சிகளை தேயிலை வாரியம் மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் இருந்து எகிப்து நாட்டிற்கு முன்பு தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. கடந்த இருபது ஆண்டுகளாக எகிப்துக்கு தேயிலை ஏற்றுமதி செய்வது சில காரணங்களினால் தடை ஏற்பட்டது. இதற்கு முன்பு தென் இந்தியாவில் உற்பத்தியாகும் சி.டி.சி. ரக தேயிலை எகிப்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த வருடம் இருபது லட்சம் கிலோ ஏற்றுமதி செய்யப்பட்டது.

இதனை அடுத்த சில வருடங்களில் 200 லட்சம் கிலோவாக அதிகரிக்கும் முயற்சியில் தேயிலை வாரியம், தென் இந்திய ஐக்கிய தோட்ட உரிமையாளர்கள் சங்கமும் (உபாசி) ஈடுபட்டுள்ளன.

இதற்காக எகிப்து தலைநகர் கெய்ரோவில் இந்திய தேயிலை மேம்பாட்டு மையத்தை அமைக்க உள்ளன.

இது குறித்து உபாசி பொதுச் செயலாளர உலாஷ் மேனன் கூறுகையில், உபாசி பிரதிநிதிகள் சமீபத்தில் கெய்ரோவிற்கு சென்றனர். அங்கு அரசு நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை பயனுள்ள முறையில் இருந்தது. இந்த ஆண்டு இறுதிக்குகள் கெய்ரோவில் இந்திய தேயிலை மையம் செயல்பட துவங்கும் என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?

அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

Show comments