Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 4 பைசா உயர்வு!

Webdunia
திங்கள், 30 ஜூன் 2008 (13:49 IST)
அந்நியச் செலவாணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 4 பைசா அதிகரித்தது.

பெட்ரோலிய நிறுவனங்கள் உட்பட பல இறக்குமதியாளர்கள் டாலரை வாங்குவதால், டாலரின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் டாலரின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

காலையில் வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ. 42.90 / 42.92 ஆக இருந்தது. பிறகு வர்த்தகம் நடக்கும் போது டாலரின் மதிப்பு உயர்ந்து, 1 டாலரின் விலை ரூ.42.92 / 42.94 ஆக அதிகரித்தது.

இது வெள்ளிக் கிழமை விலையை விட, 4 பைசா அதிகம். வெள்ளிக் கிழமை இறுதி நிலவரம் 42.88 / 42.89.

மற்ற அந்நிய செலவாணிகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்தது. இதனால் இன்று ஆசிய சந்தைக்கான கச்சா எண்ணெய் விலை சுமார் 142 டாலராக அதிகரித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

Show comments