Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் - குறைந்த வட்டியில் கடன்: ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை!

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2008 (16:46 IST)
விவசாயத்திற்கு வழங்குவது போல் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்று ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர ்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகி ன fறத ு. அத்துடன் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளத ு. இது போன்ற காரணங்களால் இந்தியாவில் உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர ்.


இதற்கு மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பிப்ரவரி 29 ஆம் தேதி சமர்பிக்க உள்ள பட்ஜெட்டில் பல சலுகைகளை எதிர்பார்க்கின்றனர ்.

இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம ், ஏற்றுமதியாளர்களுக்கு திருப்பி கொடுக்கும் வரியை 5 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும ். ஏற்கனவே மத்திய அரசு ஏற்றுமதியாளர்களுக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளத ு. ஆனால் இவை ஏற்றுமதியாளர்களின் ஏற்றுமதி குறைந்ததால் ஏற்பட்ட இழப்பையும ், வட்டி அதிகரித்த காரணத்தினால் ஏற்பட்ட கூடுதல் செலவையும் ஈடு செய்யும் விதத்தில் இல்ல ை.

எனவே அரசு விவசாய துறைக்கு வழங்குவது போல ், ஏற்றுமதியாளர்களுக்கும் ஏழு விழுக்காடு வட்டியில் கடன் வழங்க வேண்டும ். அத்துடன் தேவையான கடன் கிடைக்க செய்ய வேண்டும ்.

ரிசர்வ் வங்கி கடந்த இரண்டு பொருளாதார ஆய்வு அறிக்கை வெளியிட்ட போதும ், ஏற்றுமதியாளர்களுக்கு வட்டி குறைப்பு அறிவிப்பை வெளியிடவில்லை என்று கூறியுள்ளனர ்.

மேலும் இந்த சங்கம் சமர்பித்துள்ள கோரிக்கை மனுவில ், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழுவின் சேர்மன் ச ி. ரங்கராஜன ், இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பது கவலையை ஏற்படுத்துகிறத ு. இதனால் சர்வதேச ஏற்றுமதி சந்தையில் இந்தியாவின் பங்கு குறையும ். பல பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு குறைவதுடன ்,. அதன் அளவும் குறையும் என்று கூறியதை சுட்டிக்காட்டியுள்ளனர ்.

ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு வருமான வரிச் சட்டம் 80 வது பிரிவின் கீழ் முழு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும ்.

இத்துடன் ஏற்றுமதி சரக்கை விரைவாக அனுப்பும் வகையில் துறைமுகங்களில் இட நெருக்கடி ஏற்படாமல் இருக்க உள்கட்டுமான வசதிகளை மேம்படுத்த வேண்டும ். சுங்க துறையில் உடனடியாக அனுமதி கிடைப்பதுடன ், இதற்கான கட்டணங்களையும் குறைக்க வேண்டும ்.

அடிக்கடி மின் பற்றாக்குறை ஏற்படுகிறத ு. இதற்காக ஏற்றுமதியாளர்கள் சொந்தமாக மின் உற்பத்தி செய்ய வேண்டிய நிலை உண்டாகிறத ு. மின் உற்பத்திக்கு தேவையான ஜெனரேட்டர்களுக்கு உற்பத்தி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும ்.

ஏற்றுமதி தொடர்பான எல்லா நடவடிக்கைகளுக்கும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும ். இப்போது வரியை முதலில் செலுத்தி விட்ட ு, அதை திரும்ப பெறுவதில் பல சிரமங்கள் இருப்பதுடன ், கால தாமதமும் ஏற்படுகிறத ு.

மாநில அரசுகள் பல்வேறு வரிகளை விதிக்கின்ற ன. இந்த வரிகள் மொத்த ஏற்றுமதி சரக்கின் மதிப்பில் ஆறு விழுக்காடாக இருக்கின்றத ு. மாநில அரசு விதிக்கும் வரிகளை திரும்ப வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும ்.

ஏற்றுமதி ஆடை தயாரிக்க தேவைப்படும் இயந்திரங்கள ், துண ி, மற்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறத ு. இவைகளுக்கு தற்போது இறக்குமதி வரி விதிக்கப்படுகிறத ு. இந்த இறக்குமதி வரியை முழுமையாக நீக்க வேண்டும ்.

ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் எந்த பகுதியில் அமைந்து இருந்தாலும ், அவற்றை 100 விழுக்காடு ஏற்றுமதி நிறுவனமாக கருத ி, வரிச் சலுகை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர ்.

இந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் சுரீந்தர் ஆனந்த் கூறுகையில ், சரக்குகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்பு வழங்கப்படும் கடன ், ஏற்றுமதி செய்த பிறகு வழங்கப்படும் கடனுக்கான வட்டியை மேலும் இரண்டு விழுக்காடு குறைக்க வேண்டு ம. இந்த கடன் திருப்பி கட்டுவதற்கான காலத்தை 360 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்று கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

UG நீட் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும்..! காங்கிரஸ் வலியுறுத்தல்..!!

உத்திர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.! சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

தி.மு.க. ஆட்சியில் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.! அண்ணாமலை காட்டம்..!!

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையா? சசிகலா கண்டனம்..!

ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் பேரிழப்பு: ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து உதயநிதி..!

Show comments