Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரக மின்கட்டுமான கழகம் பங்கு வெளியீடு!

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2008 (18:37 IST)
பங்குச் சந்தையில் மந்த நிலை நிலவிய போதும ், மத்திய அரசு நிறுவனமான ஊரக மின்கட்டுமான கழகம் ( Rural Electrification Corporation) திட்டமிட்டபடி பொதுப் பங்குகளை வெளியிட திட்டமிட்டுள்ளத ு.

இது ர ூ.10 முகமதிப்புள்ள பங்குகளை ர ூ.90 முதல் ரூ.105 என்ற விலையில் வெளியிடுகிறத ு. மொத்தம் 15 கோடியே 61 ஆயிரத்து 20 ஆயிரம் பங்குகளை வெளியிடுகிறத ு. இதன் மூலம் இதன் மொத்த முதலீட்டில் 18.81 விழுக்காடு மதிப்பிற்கான பங்குகளை வெளியிடுகிறத ு. இதற்கு நாளை முதல் பிப்ரவரி 22 ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம ்.

மினி ரத்னா அந்தஸ்து பெற்றுள்ள பொதுத் துறை நிறுவனமான ஊரக மின்கட்டுமான கழகம ், பல் வேறு மாநிலங்களில் ஊரக பகுதிகளில் மின் வசதி ஏற்படுத்துவதற்கு நிதி உதவி அளித்து வருகிறத ு.

பங்குச் சந்தையில் சமீப காலமாக பங்குகளின் விலைகள் தொடர்ந்து குறைந்து வருகிறத ு. இதனால் மூன்று வாரங்களில் குறியீட்டு எண்கள் சுமார் 3 ஆயிரம் புள்ளிகள் சரிந்த ன.
அத்துடன் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரிலையன்ஸ் பவர் பங்குகளின் வில ை, பட்டியப்பட்ட முதல் நாள ே, ஒதுக்கீட்டு விலைக்கும் குறைந்தத ு.

இந்த சூழ்நிலையால் ரியல் எஸ்டேட் நிறுவனமான எம்மார் எம ். ஜ ி. எப்., மருத்துவமனை நிறுவனமான வொக்ஹார்ட் ஆகிய இரணடும் பொதுப் பங்குகளை திரும்ப பெற்ற ன.

அத்துடன் ஹைதரபாத்தைச் சேர்ந்த எஸ ். வ ி.இ. சி. கன்ஸ்ட்ரக்சன் லிமிடெட் நிறுவனமும் பொது பங்கு வெளியீட்டை ஒத்திவைத்தத ு.

இந்த நிலைக்கு காரணம ், பங்குளை வெளியிடும் நிறுவனங்கள ், அவற்றின் உண்மையான மதிப்பை வி ட, பங்குகளுக்கு அதிக விலை நிர்ணயிப்பத ே. இதை பங்குகளை வெளியிடும் நிறுவனங்களும ், மெர்ச்சன்ட் பேங்கர்களும் கணக்கில் எடுத்துக் கொண்ட ு, சரியான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று பங்குச் சந்தை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர ்.

இந்த சூழ்நிலையில் ஊரக மின்கட்டுமான கழகம் பொதுப் பங்குகளை வெளியிடுகிறத ு. இதற்கு எல்லா தரப்பு முதலீட்டாளர்கள் மத்தியிலும் வரவேற்பு இருக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளத ு.

இது குறித்து மத்திய மின்துறை செயலாளர் அனில் ராஜ்தான் கூறுகையில ், பங்குச் சந்தையில் பஙகுகளின் விலை குறைவத ு, ஊரக மின்கட்டுமான கழகத்தின் பொதுப்பங்கு வெளியீட்டிற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத ு. பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள ், கடந்த காலங்களில் சிறப்பாக செய்ல்பட்டுள் ள, இந்த மாதிரியான நிறுவனங்களையே எதிர்பார்க்கின்றனர ்.
இதன் பங்குகள் மார்ச் மூன்றாவது வாரத்தில் பட்டியலிடப்படும் என்று தெரிவித்தார ்.

இந்த கருத்தையே பங்குச் சந்தை ஆய்வாளர்களும் எதிரெலிக்கின்றனர ். அவர்கள் இந்த பங்கின் விலை அதிக அளவு இல்ல ை. இதனிடம் போதிய வர்த்தக வாய்ப்புகள் உள்ள ன. இதற்கு சிறந்த முறையில் வரவேற்பு இருக்கும் என்று கூறுகின்றனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணமா? காவல் ஆணையர் விளக்கம்..!!

ஆற்காடு சுரேஷ் உருவப்படம் அருகே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கத்தி.. அதிர்ச்சி தகவல்..!

UG நீட் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும்..! காங்கிரஸ் வலியுறுத்தல்..!!

உத்திர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.! சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

தி.மு.க. ஆட்சியில் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.! அண்ணாமலை காட்டம்..!!

Show comments