Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட்டில் விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும்?

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2008 (16:02 IST)
மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு கடன் நிவாரணம் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது!

மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பிப்ரவரி 29 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் சமர்பிக்க உள்ளார ். அடுத்த வருடம் வரும் நாடாளுமன ற, சட்டபேரவைத் தேர்தல்ளை மனதில் கொண்டு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பினரிடமும் உள்ளத ு.

இந்திய தொழில் துறையின் வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில ், விவசாய துறையின் வளர்ச்சி பின் தங்கி இருக்கின்றத ு. அத்துடன் விவசாயமே கட்டுப்படியாக கூடிய தொழிலாக இல்ல ை. விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்து செய்து கொள்கின்றனர ். அதே நேரத்தில் இந்தியா அத்தியாவசிய உணவுப் பொருட்கள ், எண்ணெய் வித்த ு, பருப்பு வகைகளை இறக்குமதி செய்யும் நிலையில் உள்ளத ு. சுயசார்பு என்பது போய ், அந்நிய நாடுகளை நம்பி இருக்கும் அவல நிலை தொடர்கிறத ு.

நல்ல விளைச்சளை கொடுக்கும ், வளமான மண் வளம் உள்ள விவசாய நிலங்கள் தொழில் வளர்ச்ச ி, சிறப்பு பொருளாதார மண்டலம ், குடியிருப்பு என்று பல்வேறு பெயர்களில் மாறிவருகின்றத ு. பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வந்த விவசாயிகள ், விளை நிலத்தை விற்பனை செய்து விட்ட ு, நகரங்களை நோக்கி கூலித் தொழிலாளர்களாக புறப்பட்டு செல்கின்றனர ்.

( மற்றொரு புறம் தரிசு நில மேம்பாட்டிற்காக பல கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறத ு).

இந்த அவலநிலைக்கு காரணம ், விவசாயத்திற்கு செய்த செலவை கூ ட, விளை பொருட்களின் விற்பனையில் கிடைக்கவில்லை என்பதுதான ்.

விவசாயிகளின் கடன் சுமைக்கு தீர்வு காணும் விதத்தில் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புக்கள் இருக்கும் என்று தெரிகிறத ு.

சென்ற பொதுத்தேர்தலின் போது ஆளும் கட்சியாக இருந்த பாரதீய ஜனதா இந்தியா மிளர்கிறது என்ற கோஷத்தை முன்வைத்து தேர்தலை சந்தித்தத ு.

இதற்கு மாற்றாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கிராமப்புற இந்தியாவுக்கு சிறப்பு கவனம் என்ற கோஷத்தை முன் வைத்தத ு.

மக்களும் கிராமப்புறங்களின ், குறிப்பாக விவசாயிகளின் வறும ை, கடன் தொல்லை என்ற கழுத்தை முறிக்கும் நெருக்கடி தீர்ந்து விடும ். நமக்கு விடிவு காலம் பிறந்து விட்டது என மகிழ்ந்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்தனர ்.


ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுத ி, வ ெற்ற ு கோஷமாகவே போய்விட்டத ு. விவசாயிகளின் நிலை நாளுக்கு நாள் நெருக்கடிக்குள்ளானத ு.

தற்போது அடுத்த வருடம் பொதுத் தேர்தலை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில ், மத்தியில் ஆட்சி புரியும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உள்ளத ு.

இந்த முறை தேர்தல் அறிவிப்பாக இல்லாமல ், நாடாளுமன்றத்திலேயே பட்ஜெட்டில் விவசாய துறைக்கு பல்வேறு நிவாரணம் அறிவிக்கும் என தெரிகிறத ு.

இந்த பட்ஜெட்டில்

இந்தியாவில் விவசாய கடனாக ர ூ.32 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளத ு. இந்த கடனகள் முழு அளவிலோ அல்லது குறிப்பிட்ட விழுக்காடோ தள்ளுபடி செய்யப்படலாம் என்று தெரிகிறத ு.

இதில் சில கடன்களுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படலாம ்.
சில வகை கடன்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படலாம ்.

விவசாய துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களுக்கு சுமார் ர ூ.90 ஆயிரம் கோடி வரை திட்டம் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறத ு.

வர்த்த வங்கிகளில் திரும்பி வராத விவசாய கடன்கள் ர ூ.7,500 கோடி வரை இருக்கிறத ு.

விவசாயிகளுக்கு அதிக அளவு கடன் வழங்கும் கூட்டுறவு வங்கிகள ், ஊரக வளர்ச்சி வங்கிகளில் நிலுவையில் ர ூ.30 ஆயிரம் கோடி இருக்கிறத ு. இத்துடன் விவசாய துறையில் மாற்றியமைக்கப்பட்ட கடனாக சுமார் ர ூ.30 ஆயிரம் கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளத ு.

இந்த கடன்களை தள்ளுபடி செய்வத ு, மாற்றியமைப்பது உட்பட பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம ்.
ஏனெனில் விவசாய உற்பத்தி வளர்ச்சியை 4 விழுக்காடாக உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருகிறத ு.

விவசாயம ், உர மானியம ், நீர் பாசனம ், விளை பொருட்களின் குறைந்த பட்ச வில ை, சந்தைபடுத்தும் வசதி போன்றவைகளுக்கு கொள்கைகளும ், மானியங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று விவசாயிகளிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணமா? காவல் ஆணையர் விளக்கம்..!!

ஆற்காடு சுரேஷ் உருவப்படம் அருகே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கத்தி.. அதிர்ச்சி தகவல்..!

UG நீட் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும்..! காங்கிரஸ் வலியுறுத்தல்..!!

உத்திர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.! சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

தி.மு.க. ஆட்சியில் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.! அண்ணாமலை காட்டம்..!!

Show comments