Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறக்கட்டளைகள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி!

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2007 (15:31 IST)
அறக்கட்டளைகள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி அளிப்பது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது அறக்கட்டளைகள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும். அரசு ஒவ்வொரு அறக்கட்டளையின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து அனுமதி அளிக்கிறது.

இதற்கு பதிலாக அறக்கட்டளைகளே சுதந்திரமாக பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்திருப்பதாக அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இதற்காக இந்திய அறக்கட்டளைகள் சட்டத்தின் எஃப் - 20 வது பிரிவில் திருத்தம் கொண்டு வரப்படும். இதன் படி எந்த வகையான பங்குகளில் அறக்கட்டளைகள் முதலீடு செய்யலாம் என்று அரசிதழில் வெளியிடப்படும். இதற்கான சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தின் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments