Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரத் செல் லிமிடெட் பங்குளை விற்க அனுமதி

Webdunia
சனி, 1 டிசம்பர் 2007 (15:14 IST)
பாரத் செல் லிமிடெட் நிறுவனத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனுக்கு சொந்தமாக உள்ள பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனும், ஹாலந்து நாட்டைச் சேர்ந்த செல் பெட்ரோலிய நிறுவனமும் இணைந்து ரூ.200 கோடி முதலீட்டில் 1993 ஆம் ஆண்டு பாரத் செல் லிமிடெட் என்ற நிறுவனத்தை துவக்கின.

இது வாகனங்கள், இயந்திரங்களுக்கு தேவையான மசகு எண்ணெய், கிரிஸ் விற்பனை செய்கின்றது. அத்துடன் சமையல் எரிவாயுவையும் விற்பனை செய்கிறது.

இந்த கூட்டு நிறுவனத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனுக்கு 49 விழுக்காடு பங்கு உள்ளது.

இ‌ந்த பங்கை ரூ.152.40 கோடிக்கு விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த பங்குகளை ஹாலந்தைச் சேர்ந்த செல் நிறுவனம் அல்லது அதன் துணை நிறுவனத்திடம் விற்பனை செய்யப்படும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments