Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானப் படை வெள்ளி விழா : புதிய நாணயம் வெளியீடு.

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2007 (10:53 IST)
இந்திய விமானப்படையின் வெள்ளி விழாவை சிறப்பிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி புதிய இரண்டு ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறது.

இந்த எவர்சில்வர் நாணயத்தில் நேர் கோடுகளால் இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டு இருக்கும். ஒரு பாகத்தில் அசோக சின்னமும், அதன் கீழ் சத்தயமே ஜெயதே என்ற வாசகமும் பொறிக்கப்பட்டு இருக்கும். நாணயத்தின் மதிப்பை குறிக்கும் வகையில் 2 என்ற எண் இடம் பெற்று இருக்கும்.

மற்றொரு புறத்தில் விமானப் படையின் 75 ஆண்டு வளர்ச்சியை எடுத்துக் காட்டும் வகையில் முதல் போர் விமானமான வாபிடியின் படமும், சமீபத்திய நவீன் போர் விமானமான எஸ்.யூ.30 ரக விமானத்தின் படமும் பொறிக்கப்பட்டு இருக்கும்.

இந்த புதிய நாணயம் கூடிய விரைவில் பொது மக்களின் புழக்கத்திற்கு விடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments