Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்கா, பான் மசாலா தயாரிப்பாளர்கள் வரி ஏய்ப்பு!

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2007 (19:38 IST)
குட்க ா, பான் மசாலா தயாரிப்பாளர்கள் போன்ற சி ல நிறுவனங்கள் பெருமளவு வரி ஏய்ப்பு செய்கின்றனர் என்று மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியத்தின் தலைவர் எஸ ். க ே. சிங்கால் குற்றம் சாற்றினார ்.

அகமதாபாத்தில் நேற்று குஜராத் வர்த்தக மற்றம் தொழில் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் சிங்கால் உரையாற்றினார ்.

அப்போது அவர ், குட்க ா, பான் மசாலா தயாரிப்பாளர்கள் போன்ற சில பிரிவினர் பல கோடி ரூபாய் வரி ஏற்பு செய்கின்றனர ்.

இதனால் அரசு எதிர்பார்க்கும் அளவில ், சிறிய அளவே வரி வசூல் செய்ய முடிகிறத ு. இதனால் அரசுக்கு வேறு வழியில்லாமல் இந்த வரி ஏய்ப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டியதுள்ளத ு. இந்த மாதிரியான வர்த்தக சங்கங்கள் நேர்மையாக வரியை செலுத்தும்பட ி, தொழில ், வர்த்தக துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும ்.

அரசுக்கு அதிக அளவு வரி வசூலானால் தான் அரசால் தொழில ், வர்த்தக துறையினருக்கு அதிக வசதிகளை செய்து தர முடியம ். தொழில் துறையும ், வர்த்தக துறையும வளர்ச்சி அடையாமல ், நாட்டின் வளர்ச்சி சாத்தியமில்ல ை. எனவே அரசு அதிகளவு உதவிகளும ், ஒத்துழைப்பும் வழங்க தீர்மானித்துள்ளத ு.

நேர்மையாக வரிகள் செலுத்துவதால ், வரி ஏய்ப்புக்காக திடீர் சோதன ை, பொருட்களை கைப்பற்றுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய தேவை ஏற்படாத சூழ்நிலை உருவாகும் என்று நம்புகின்றேன ்.

மத்திய கலால் மற்றும் சுங்க வரித்துற ை, வரியாக 2006 - 07 ஆம் நிதியாண்டில் ர ூ.1.70 லட்சம் கோடி வசூல் செய்துள்ளத ு. இது இலக்கை விட அதிகம் என்று கூறினார ்.

முன்னதாக இந்த சங்கத்தின் தலைவர் பிரபுன் எம ். ஜெய்கிருஷ்ண ா, தனது வரவேற்புரையில் வரி சிரமைப்ப ு, வரி விகிதங்களை மாற்றுதல ், விதிகளை எளிதாக்குதல் போன்றவைகளுக்காக டாக்டர் கெல்கர் குழு கொடுத்த பரிந்துரைகளை அமல் படுத்த வேண்டும் என்று கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments