Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டுறவு வங்கிகள் முதலீடு : ரிசர்வ் வங்கி உத்தரவு!

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2007 (18:56 IST)
பரஸ்பர நிதிகள் ( மியூச்சுவல் பண்ட் ) வெளியிடும் கடன் பத்திரங்கள ், குறுகிய கால கடன் பத்திரங்கள் ஆகிய திட்டங்களில் மட்டுமே நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் முதலீடு செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளத ு.

நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் திரட்டும் வைப்பு நிதியில் குறிப்பிட்ட விழுக்காடு அரசு கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்ற விதி முன்பு இருந்தத ு.
அரசு கடன் பத்திரங்களில் செயயப்படும் முதலீட்டை வி ட, மற்ற திட்டங்களில் முதலீடு செய்தால் வருவாய் அதிகம் கிடைக்கும ். இதற்காக ரிசர்வ் வங்கி முன்பு நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள ை, யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய அனுமதி வழங்கியத ு.

இந்த விதி இப்பொழுது சிறிது தளர்த்தப்பட்டுள்ளத ு. இதன் படி ய ூ. ட ி. ஐ தவிர மற்ற நிறுவனங்களின் பரஸ்பர நிதிகளிலும் முதலீடு செய்யலாம் என்று கூறியுள்ளது.
ஆனால் முழுவதும் பங்குச் சந்தையில முதலீடு செய்ய நிதி திரட்டப்படும் பரஸ்பர நிதி திட்டங்கள ், குறிப்பிட்ட விழுக்காடு பங்குச் சந்தையிலும ், மீதம் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும் திட்டங்களில் முதலீடு செய்யக் கூடாத ு.

கடன் பத்திரங்கள ், குறுகிய கால கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டங்களின் பரஸ்பர நிதியில் மட்டுமே நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் முதலீடு செய்ய என்று ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி உள்ளத ு. இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளத ு.

பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்ட வைப்பு நிதிய ை, கூட்டுறவு வங்கிகள் அதிக இடர்பாடு ( ரிஸ்க் ) உள்ள பங்குச் சந்தையில் நேரடியாகவோ அல்லது பரஸ்பர நிதிகள் வெளியிடும் யூனிட் வாயிலாகவோ முதலீடு செய்யக் கூடாது என்பதற்காகவ ே, இந்த நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளத ு.

மகாராஷ்டிர மாநிலத்தில் பொது மக்களிடமிருந்து திரட்டிய வைப்பு நிதியை கூட்டுறவு வங்கிகள் பங்குச் சந்தையில் முதலீடு செய்த ன. பங்குகளின் விலை சரிந்ததால ், இவை முதலீடு செய்த பங்குகளின் விலை குறைந்தத ு. இதனால் கூட்டுறவு வங்கிகள் திவாலானத ு.

இதில் வைப்புநிதி செலுத்தி இருந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர ். இதன் விளைவாகவே இந்த நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments