ரூபாயின் பண வீக்கம் : 4.10 விழுக்காடாக உயர்வு

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2007 (12:54 IST)
உணவு பொருட்கள், தொழிலக உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வால் ரூபாயின் வாங்கும் சக்தி 0.05 விழுக்காடு குறைந்துள்ளது.

ஆகஸ்ட் 4ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 4.05 விழுக்காடாக இருந்த பண வீக்க விகிதம் ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 4.10 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே வாரத்தில் பண வீக்க விகிதம் 5.07 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கோதுமை, அரிசி, பருப்பு வகைகளின் உற்பத்தி முழுமையாக சந்தையை வந்தடையும் வரை உணவுப் பொருட்களின் விலையின் மீதான அழுத்தம் தொடரும் என்று கூறிய நிதியமைச்சர் சிதம்பரம், பண வீக்கத்தை 4 விழுக்காடு அளவிற்கு கட்டுப்பாட்டில் கொண்டு வரவே அரசு விரும்புகிறது என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

19 நிபந்தனைகளுடன் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி!..

வேட்புமனு தாக்கல் செய்யாத 2 தவெக வேட்பாளர்கள்!. பின்னணி என்ன?...

நாளையும் விஜய் சென்னை பிரச்சாரம் ரத்து!. இதுக்கு இல்லையா ஒரு எண்டு!..

சாத்தான்குளம் வழக்கு!. மேல்முறையீடு செய்தால் தீர்ப்பு மாறுமா?.. வழக்கறிஞர்கள் சொல்வது என்ன?..

சாத்தான்குளம் கொலை வழக்கு!.. 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை!. நீதிபதி அதிரடி தீர்ப்பு..

Show comments