Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீரில் மூழ்கியுள்ள பயிர்களைக் காக்க வழிமுறைகள்!

Webdunia
பயிரிடப்பட்ட சம்ப ா, தாளடி பயிர்கள் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கியிருந்ததால் அவற்றை காப்பதற்கான வழிமுறைகளை தஞ்சை வேளாண் இணை இயக்குநர் மு. ஜோதி கூறியுள்ளார்!

தஞ்ச ை, திருவாரூர் போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

அவற்றில ், 60 நாள் வளர்ந்த பயிர்கள ், தண்ணீரில் மூழ்கி மஞ்சள் நிறத்துடன் காணப்பட்டால் 42 கிலோ அம்மோனியம் குளோரைடு அல்லது 50 கிலோ அம்மோனியம் சல்பேட் அல்லது 22 கிலோ யூரியாவுடன் 17 கிலோ பொட்டாஷ் கலந்து இட வேண்டும்.

15 - 20 நாள் இளம் பயிர்கள் வெளிர் மஞ்சள் நிறத்துடன் காணப்பட்டால ், 2 கிலோ யூரியா மற்றும் ஒரு கிலோ ஜிங்க் சல்பேட்டை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

கதிர் வரும் பருவத்தில் உள்ள பயிர்கள் மழை நீரில் மூழ்கியிருந்தால ், கதிர் விடுவது தாமதமாகும். இதை போக்க ஒரு ஏக்கருக்கு 4 கிலோ டிஏப ி, 2 கிலோ யூரிய ா, 2 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பூச்ச ி, நோய்களிலிருந்து காப்பாற்ற!

தற்போத ு, நிலவும் அதிக ஈரப்பதம் காரணமாக நெற்பயிரை பூச்சிகள ், நோய்கள் தாக்க வாய்ப்பு அதிகம்.

இலை சுருட்டிப்புழ ு, இருத்துப் பூச்ச ி, சாறு உறிஞ்சும் பூச்சி ஆகியவை காணப்பட்டால் 6 லிட்டர் வேப்பெண்ணையை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதனுடன் 100 மில்லி ஒட்டும் திரவத்தையும் கலந்து தெளிக்க வேண்டும்.

இதேப்போன்று பாக்டீரியல் இலை கருகல் நோய்த் தாக்கினால ், 40 கிலோ பசுஞ்சானத்தை 50 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் இரவே ஊற வைக்க வேண்டும். பின்னர் காலையில் மேலாக உள்ள திரவத்தை எடுத்து 150 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் என்று தஞ்சை வேளாண் இணை இயக்குநர் மு. ஜோதி கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கான பந்தகால் நடும் விழாவே மாநாடு போல் அமைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி!

மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!

கள்ள காதலி வீட்டில் மர்மான முறையில் இறந்த கள்ளக்காதலன் : போலீசார் விசாரணை!

வைகை நதியை சுத்தம் செய்ய பணம் கேட்டு நேரில் வந்து மிரட்டல்- மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன் மதுரை ஆதீனம் பேச்சு!

Show comments