Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமராவதி அணை திறப்பு : வெள்ள அபாயம்!

Webdunia
ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் அமராவதி அணை நிரம்பியதை அடுத்து அதிலிருந்து நொடிக்கு 96,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருவதையடுத்து வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது!

அமராவதியிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கரூர் மாவட்டத்தில் பாய்ந்து பிறகு காவிரியில் கலப்பதால் காவிரியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமராவத ி, காவிரி ஆற்றங்கரைகளில் ஒட்டி குடியிருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு கரூர ், ஈரோட ு, கோவை மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல கடலூர் மாவட்டத்தில் மணிமுத்தாறில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 15 கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு நதிக்கு நொடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது.

இதுமட்டுமின்ற ி, கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது. வீராணம் ஏரியும் நிரம்பிவிட்ட நிலையில ், இம்மாவட்டத்திற்கு வெள்ள அபாயம் தொடர்ந்து நீடிக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கான பந்தகால் நடும் விழாவே மாநாடு போல் அமைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி!

மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!

கள்ள காதலி வீட்டில் மர்மான முறையில் இறந்த கள்ளக்காதலன் : போலீசார் விசாரணை!

வைகை நதியை சுத்தம் செய்ய பணம் கேட்டு நேரில் வந்து மிரட்டல்- மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன் மதுரை ஆதீனம் பேச்சு!

Show comments