ரூ.2,092 கோடி செலவில் சிறு பாசனத் திட்டங்கள்!

Webdunia
இந்தியா முழுவதும் 10வது ஐந்தாண்டுத் திட்டத்தில் நிறைவேற்ற ஒப்புக்கொள்ளப்பட்ட சிறு பாசனத் திட்டங்களை ரூ.2,092 கோடி செலவில் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது!

தலைநகர் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இம்முடிவை செய்தியாளர்களிடம் நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்தார்.

மத்தி ய, மாநில அரசுகளும ், அந்தந்தப் பகுதிகளின் விவசாயிகளும் பங்களித்து நிறைவேற்றப்படக் கூடிய சிறு பாசன திட்டங்களுக்கு மத்திய அரசு தனது பங்காக ரூ.850 கோடியும ், மாநில அரசுகள் ரூ.207 கோடியும ், மீதத் தொகையை திட்டத்தால் பயன்பெறும் அப்பகுதி விவசாயிகளும் அளிப்பார்கள் என்று ப. சிதம்பரம் கூறினார்.

2005-06 நிதிநிலை அறிக்கையில் சிறு பாசனத் திட்டங்களுக்காக ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அடுத்த நிதிநிலை அறிக்கையில் ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படும் சிறு பாசன அமைப்புகளால் நாடு முழுவதும் 6.2 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

சொட்டு நீர் மற்றும் தூவல் நீர் பாய்ச்சி செய்யப்படும் விவசாயங்களுக்கு பலனளிக்கும் வகையில் இந்த சிறு பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எள்ளுவய பூக்கலயே!.. தனித்துவிடப்பட்ட ஓபிஎஸ்!.. எல்லாம் வீணாப்போச்சி!...

எல்லா பக்கமும் கதவ மூடியாச்சி!.. என்ன முடிவெடுக்கப் போகிறார் ராமதாஸ்?...

வாடகைக்கு ஆட்களை அமர்த்தி 100 நாய்களை சுட்டுக்கொன்ற கிராம தலைவர்.. போலீஸ் வழக்குப்பதிவு..!

அரை கிலோமீட்டர் டாக்சியில் செல்ல ரூ.18000.. சிறையில் கம்பி எண்ணும் டாக்சி டிரைவர்..!

குரங்கு என நக்கலடித்த கணவர்!.. தூக்கில் தொங்கிய மாடல் அழகி!...

Show comments