ரூபாய் மதிப்பு 21 பைசா உயர்வு

Webdunia
வியாழன், 22 ஜனவரி 2009 (11:32 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 பைசா அதிகரித்தது.

ஆசிய நாட்டு சந்தைகளில் சாதகமான நிலை நிலவுவதால், இந்திய பங்குச் சந்தையில் இன்றும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. இதனால் அந்நிய முதலீடு வரும் என்பதால் ஏற்றுமதியாளர்கள், வங்கிகள் டாலரை விற்பனை செய்தனன. இத்துடன் மற்ற நாட்டு நாணயங்களுக்கு நிகரான இந்திய டாலரின் மதிப்பும் குறைந்தது. இதுவும் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து, டாலரின் மதிப்பு குறைவதற்கு காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று வர்த்தகம் தொடங்கும் போத ு 1 டாலரின் மதிப்பு ரூ.48.90 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 21 பைசா அதிகம்.

நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.49.11-49.12.

நேற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா அதிகரித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா போட்ட ஆர்டர்!.. ஆடிப்போன பழனிச்சாமி!.. டெல்லியில் நடந்தது என்ன?....

நாங்க நினைச்சிருந்தா விஜய் வெளியவே வந்திருக்க முடியாது!.. ஹெச்.ராஜா ராக்ஸ்....

திருப்பதி ஏழுமலையான் கோவில்: ஆஃப்லைன் டிக்கெட்டுகள் நிறுத்தம்.. இனி முழுமையாக ஆன்லைன் டிக்கெட் மட்டுமே..!

விமானங்களில் இனி பவர் பேங்க் எடுத்துச் செல்ல முடியாதா? புதிய கட்டுப்பாடு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்..!

Show comments