ரூபாய் மதிப்பு 4 பைசா உயர்வு

Webdunia
புதன், 21 ஜனவரி 2009 (12:06 IST)
அந்நியச் செலவாணி சந்தையில், காலையில் வர்த்தகம் தொடங்கிய போது இருந்த நிலை அடுத்த அரை மணி நேரத்திலேயே மாறியது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போத ு 1 டாலரின் மதிப்பு ரூ.49.29 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 9 பைசா குறைவு.

அதற்கு பிறகு நிலைமை மாறியது காலை 10.30 மணியளவில், டாலரின் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்க துவங்கியது.
1 டாலர் ரூ.49.16-ரூ.49.18 என்ற அளவில் விற்பனையானது. இது நேற்று இறுதி நிலவரத்தை விட 4 பைசா உயர்வு.

நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.49.20.

இன்று அந்நியச் செலவாணி சந்தையில் டாலர் ரூ.49.16 முதல் ரூ.49.40 என்ற அளவில் விற்னையாகும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவு பங்குகளை விற்பனை செய்தால், டாலரின் தேவை அதிகரிக்கும். பங்குச் சந்தை நிலவரத்தை பொறுத்தே, அந்நியச் செலவாணி சந்தையிலும் டாலரின் விலையில் மாற்றம் இருக்கும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்!.. மூழ்கும் கப்பல்... 180 வீரர்கள் கதி என்ன?....

70 சீட், ஒரு துணை முதல்வ, 6 அமைச்சர்கள்.. விஜய்யுடன் ரகசிய பேச்சுவார்த்தையை முடித்த ராகுல் காந்தி?

ஈரானில் 787 பேர் போரால் மரணம்.. ஈரான் பதிலடியில் 6 அமெரிக்க வீரர்கள் பலி.. தொடரும் போரால் பதட்டநிலை..!

சமையல் சரியில்லை என்று மாமியார் திட்டியதால்.. பெண் சாப்ட்வேர் இஞ்சினியர் எடுத்த விபரீத முடிவு..!

யோவ் அட்மின்.. உனக்கு ஓவர் நக்கல்.. விஜயை பங்கம் பண்ணிய சன் நியூஸ்!..

Show comments