ரூபாய் மதிப்பு 4 பைசா உயர்வு

Webdunia
புதன், 21 ஜனவரி 2009 (12:06 IST)
அந்நியச் செலவாணி சந்தையில், காலையில் வர்த்தகம் தொடங்கிய போது இருந்த நிலை அடுத்த அரை மணி நேரத்திலேயே மாறியது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போத ு 1 டாலரின் மதிப்பு ரூ.49.29 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 9 பைசா குறைவு.

அதற்கு பிறகு நிலைமை மாறியது காலை 10.30 மணியளவில், டாலரின் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்க துவங்கியது.
1 டாலர் ரூ.49.16-ரூ.49.18 என்ற அளவில் விற்பனையானது. இது நேற்று இறுதி நிலவரத்தை விட 4 பைசா உயர்வு.

நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.49.20.

இன்று அந்நியச் செலவாணி சந்தையில் டாலர் ரூ.49.16 முதல் ரூ.49.40 என்ற அளவில் விற்னையாகும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவு பங்குகளை விற்பனை செய்தால், டாலரின் தேவை அதிகரிக்கும். பங்குச் சந்தை நிலவரத்தை பொறுத்தே, அந்நியச் செலவாணி சந்தையிலும் டாலரின் விலையில் மாற்றம் இருக்கும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை வெளியாகும் 5 மாநில சட்டசபை தேர்தல் கருத்துக்கணிப்பு!.. எங்களோடு இணைந்திருங்கள்!..

வழக்கறிஞர் ஆனார் பேரறிவாளன்.. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பெயர் பதிவு..!

இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் கொடூர கொலை!. சென்னையில் அதிர்ச்சி...

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்.. புதிய ஏசி மின்சார ரயில் விரைவில்..!

திருச்செந்தூர் கோவிலில் ‘சத்ரு சம்ஹார பூஜை’ செய்த விஜய்!.. பின்னணி என்ன?...

Show comments