ரூபாய் மதிப்பு 7 பைசா சரிவு

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (14:21 IST)
மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா குறைந்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போத ு 1 டாலரின் மதிப்பு ரூ.48.66 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய மாலை நிலவரத்தை விட 7 பைசா அதிகம்.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.59 பைசா.

டாலருக்கு நிகரான ஆசிய நாட்டு நாணயங்களின் மதிப்பு குறைந்தது. இதனால் பொதுத்துறை வங்கிகள் அதிக அளவு டாலரை வாங்கின. அத்துடன் இறக்குமதியாளர்களும் டாலரை வாங்கினார்கள். கடந்த மூன்று நாட்களாக அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்தன. இன்று லாப கணக்கு பார்ப்பதற்கு, விற்பனை செய்யும். அத்துடன் அமெரிக்க பங்குச் சந்தையிலும், ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் பாதகமான நிலை இருந்ததால், டாலரின் தேவை அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதுவே டாலர் மதிப்பு அதிகரித்து, ரூபாய் மதிப்பு குறைவதற்கு முக்கிய காரணம்.

இன்று வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் விலை ரூ.48.58 முதல் ரூ.48.71 என்ற அளவில் இருந்தது.


ரிசர்வ் வங்க ி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம ்:
1 டாலர ் மதிப்பு ரூ.48.68 பைச ா
1 யூர ோ மதிப்பு ரூ.65.79
100 யென ் மதிப்பு ரூ.52.30
1 பவுன்ட் ஸ்டெர்லிங ் ரூ.71.08.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல்!.. எடப்பாடி பழனிச்சாமி புகார்...

திருப்பரங்குன்றம் விவகாரம்: உத்தரவை அன்றே நடைமுறைப்படுத்தியிருந்தால், சிக்கல்கள் ஏற்பட்டிருக்காது.. நயினார் நாகேந்திரன்

சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் தீர்ப்பு.. மேல்முறையீடு செய்வோம் என அமைச்சர் ரகுபதி பேட்டி..!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

Show comments