டாலர் மதிப்பு 6 பைசா உயர்வு!

Webdunia
செவ்வாய், 8 ஜூலை 2008 (16:22 IST)
அந்நியச் செலவாணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 6 பைசா அதிகரித்தது.

ஆசிய பங்குச் சந்தையில் இன்று காலையிலேயே குறியீட்டு எண்கள் குறைந்தன. அதே போல் இந்திய பங்குச் சந்தையிலும் குறியீட்டு எண்கள் சரிந்தன.

ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதனால் பெட்ரோலிய நிறுவனங்கள் டாலரை அதிக அளவு வாங்கின. இதனால் அந்நியச் செலவாணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து டாலரின் மதிப்பு அதிகரித்தது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.43.40 / 43.42 ஆக இருந்தது.

பிறகு வர்த்தகம் நடக்கும் போது இந்திய ரூபாயின் மதிப்பு சிறிது அதிகரித்தது.

1 டாலர் ரூ.43.36 / 43.37 என்ற அளவில் விற்பனையானது. இது நேற்று இறுதி நிலவரத்தை விட 4 பைசா அதிகம்.

நேற்று இறுதி விலை ரூ.43.30 / 43.31.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் கஷ்டத்தில் இருக்காங்க!.. முதல்வர் தூங்குகிறார்.. கொந்தளித்த விஜய்

11 வருஷமா ஒன்னுமே கொடுக்கல!.. ரிசல்ட் தெரியும் போல!.. பாஜகவை விமர்சிக்கும் ஸ்டாலின்!...

இறப்பதற்கு சில நிமிடத்திற்கு முன் செல்போனில் பேசி அஜித் பவார்.. யாரிடம் பேசினார்?

செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் 3 சிறுமிகள் தற்கொலை!.. ஐயோ பாவம்!...

9வது மாடியில் இருந்து குதித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் தற்கொலை.. கடிதத்தில் என்ன இருந்தது?

Show comments