டாலர் மதிப்பு 6 பைசா உயர்வு!

Webdunia
செவ்வாய், 8 ஜூலை 2008 (16:22 IST)
அந்நியச் செலவாணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 6 பைசா அதிகரித்தது.

ஆசிய பங்குச் சந்தையில் இன்று காலையிலேயே குறியீட்டு எண்கள் குறைந்தன. அதே போல் இந்திய பங்குச் சந்தையிலும் குறியீட்டு எண்கள் சரிந்தன.

ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதனால் பெட்ரோலிய நிறுவனங்கள் டாலரை அதிக அளவு வாங்கின. இதனால் அந்நியச் செலவாணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து டாலரின் மதிப்பு அதிகரித்தது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.43.40 / 43.42 ஆக இருந்தது.

பிறகு வர்த்தகம் நடக்கும் போது இந்திய ரூபாயின் மதிப்பு சிறிது அதிகரித்தது.

1 டாலர் ரூ.43.36 / 43.37 என்ற அளவில் விற்பனையானது. இது நேற்று இறுதி நிலவரத்தை விட 4 பைசா அதிகம்.

நேற்று இறுதி விலை ரூ.43.30 / 43.31.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி பர்வதமலைக்கு உங்க இஷ்டத்துக்கு ஏற முடியாது: புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு..!

2 வருட கேரண்டியுடன் நலத்திட்ட உதவி வழங்கினேன்: செல்லூர் ராஜூ

திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்!.. கொந்தளித்த திருமாவளவன்!...

நேற்று இந்தியா, இன்று ஆப்கானிஸ்தான்.. இஸ்லாபாத் குண்டுவெடிப்புக்கு பழிபோடும் பாகிஸ்தான்..!

காங்கிரஸ் போனா போகட்டும்!.. திமுக தலைமை எடுத்த முடிவு!.. அரசியல் பரபர!...

Show comments