பங்குச் சந்தையில் மாற்றம்!

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2008 (13:14 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தையில் கடந்த இரண்டு நாட்களாக நிலவிய நிலைமையில், இன்று காலை 12 மணிக்கு பிறகு மாறியது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது சென்செக்ஸ் 104.64 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 19,972.75 ஆக இருந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 34.20 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5969.95 ஆக இருந்தது. ஆனால் அடுத்த ஐந்து நிமிடங்களிலேயே சென்செக்ஸ், நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளின் விலை குறைந்தது. இதன் விலைகளில் ஏற்ற இறக்கமாக இருந்தது. இதனால் இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் ஏற்ற இறக்கமாக இருந்தன.

இந்த நிலை 12 மணிக்கு மேல் மாறியது. மும்பை பங்குச் சந்தையில் 12 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 11.18 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 19,879.29 ஆக உயர்ந்தது.
இதே போல் மிட் கேப் 130.91,சுமால் கேப் 243.64,பி.எஸ்.இ-500 47.81 புள்ளிகள் அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 24.70 புள்ளிகள் உயர்ந்தது குறியீட்டு எண் 5960.45 ஆக இருந்தது. வங்கி பிரிவு தவிர மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்து இருந்தன.
அந்நிய நாட்டு பங்குச் சந்தைகளில் ஜப்பானின் நிக்கி, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் சரிந்தன.

இன்று பங்குச் சந்தை ஒரே மாதிரியாக இல்லாமல் மாறுபடும் வாய்ப்பு உள்ளதாக மார்க்கெட் வட்டாரங்களில் கருத்து நிலவுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏலியன்கள் இருப்பது உண்மை!.. அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா பேட்டி!..

பாஜக எம்.எல்.ஏவுக்கு ஜாமின் மறுத்த உச்சநீதிமன்றம்.. கைது செய்ய விமான நிலையத்தில் காத்திருக்கும் காவல்துறை..!

விஜயகாந்தை விட விஜய் திமுகவை அதிகம் காலி பண்ணுவார்!.. டிடிவி தினகரன் ஓப்பன்...

கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்த ஜியோ.. என்ன காரணம்?

ரகசியமாக சிறையில் இருந்து வெளியே வந்தாரா இம்ரான்கான்? வெளிநாடு செல்ல திட்டமா?

Show comments