கூடுதல் வரி நிரந்தரமானதா?

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (20:51 IST)
webdunia photoFILE
மத்திய அரசுக்காக நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பட்ஜெட்டில் வருமான வரி, கலால் மற்றும் சுங்க வரிகள் மீது கூடுதல் வரி விதிப்பது வாடிக்கையாகிவிட்டது.

மாநில அரசுகளும் தங்கள் பங்குகளுக்கு விற்பனை வரி மீது கூடுதல் ( Surcharge) வரி விதிக்கின்றனர ்

கூடுதல் வரி அல்லது செஸ் என்பது அவசர நிலைமையில் குறுகிய காலத்திற்கு வரிகள் மீது போடப்படும் கூடுதல் வரிகளாகும். இது குறிப்பிட்ட நோக்கத்திற்காக, ஒரு வருடம் அல்லது ஐந்து வருடங்கள் என குறுகிய காலத்திற்கு வசூலிக்கப்பட்டால் நியாயம். ஆனால் இதுவே நிரந்தரம் என்றால், கூடுதல், செஸ் வரி என்று மறைமுகமாக வரியை உயர்த்துவதை விட, நேரடியாகவே வரியை உயர்த்திவிடலாம்.

நாடு முழுவதும் வறட்சி ஏற்பட்டிருக்கும் போது அல்லது அந்நிய நாட்டு படையெடுப்பின் போது அரசுக்கு அதிகளவு வருவாய் வேண்டும். அந்த மாதிரியான அவசர நிலை காலங்களில் குறுகிய காலத்திற்கு கூடுதல் வரி விதித்தால் வரி கட்டுபவர்கள் பொறுத்துக் கொள்வார்கள்.

இதுவே தொடர்ந்தால், நல்ல குடிமகனாக வரியை கட்டுங்கள். அடிப்படை வசதிகளை பெருக்க தவறாது வரியை கட்டுங்கள். வரி கட்டுவது உங்கள் குடிமகனின் தலையாய கடமை என்று அறிவுரை கூறுவதற்கு ஆட்சியாளர்கள் தார்மீக ரீதியாக தகுதியை இழந்து விடுவார்கள்.

முன்பு கார்கில் போரின் போதும், குஜராத் நில நடுக்கம் போன்ற இயற்கை இடர்பாடுகளின் போது கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இந்த வரியை செலுத்தியவர்கள் எவ்வித ஆட்சேபனையும் இன்றி செலுத்தினார்கள்.

ஆனால் இதுவே தொடர் கதையாக மாறினால் வரி செலுத்த வேண்டும் என்று மனதார நினைப்பவர்களின் தேசபக்தி கூட மழுங்கிப் போய்விடும்.

2004-05 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அடிப்படை கல்விக்கான செலவுகளை ஈடுகட்ட வருமான வரி மீது 2 விழுக்காடு கூடுதல் வரி விதிக்கப்பட்டது.

2007-08 ஆம் ஆண்டு உயர்கல்வி செலவுக்காக மேலும் கூடுதலாக 1 விழுக்காடு கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இவை சமீப காலங்களில் போடப்பட்ட கூடுதல் வரிகள்.

இவை மட்டுமல்லாமல் 1999-2000 ஆம் ஆணடு பற்றாக்குறையை ஈடுகட்டவும், கூடுதல் செலவினங்களுக்காகவும், மேம்பாட்டு செலவுக்காகவும் 10 விழுக்காடு கூடுதல் வரி விதிக்கப்பட்டது.

இது அடுத்த வருட பட்ஜெட்டில் நீக்கப்படவில்லை. பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி தேவைப்படுவதாக கூறி, அப்படியே தொடர்ந்தது. அத்துடன் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமாக வருவாய் இருப்பவர்களுக்கு கூடுதல் வரி 10 விழுக்காட்டில் இருந்து 15 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டது.

இந்த கூடுதல் வரிகள் எதாவது புது புது காரணகங்கள் கூறி வருடா வருடம் அப்படியே தொடர்கிறது. அது எந்த கட்சியைச் சேர்ந்தவர் நிதி அமைச்சராக வந்தாலும் கூட, கூடுதல் வரியை விதிப்பதிலும், தொடர்வதிலும் ஒற்றுமையாக ஒரே மாதிரியாகவே இருக்கின்றனர் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

இதை விட நிதி அமைச்சர்கள் வெளிப்படையாக நிரந்தரமாகவே வரியை உயர்த்திவிடலாம். நமது மத்திய மாநில அரசுகள் வரியை குறைத்திருப்பதாக மார்தட்டிக் கொண்டு, கூடுதல் வரி, செஸ் என்ற போர்வையில் வரிச்சுமையை அதிகரிப்பதை இனிமேலாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த வருடம் பிப்ரவரி 29 ந் தேதி நிதி அமைச்சப் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் போது, கூடுதல் வரி என்ற கூடுதல் சுமையை நீக்க வேண்டும்.

அரசு நேரடி வரி வருவாயை இழக்க விரும்பாவிட்டால் நேரடியாகவே வரிகளை உயர்த்தி விடலாம்.

எங்கள ் இணை ய தளத்தில ் பதிவ ு செய்யுங்கள ்.

உங்கள ் கருத்த ு பரிமாற்றம ் மத்தி ய, மாநி ல அரசுகள ை மக்களின ் ம ன ஓட்டம ், தேவைகள ் பற்ற ி அறி ய உதவியா க இருக்கும ்.

இதில ் தனிநபர்கள ், வியாபாரிகள ் சங்கம ் போன் ற அமைப்புகள ், குடும் ப நித ி அமைச்சர்களா ன பெண்கள ், அவர்கள ் அமைப்புக்கள ், தொழில ் அமைப்புக்கள ், தொழிலாளர ் சங்கங்கள ் எல்லோரும ் பங்க ு கொள்ளலாம ்.

உங்கள ் கருத்துக்கள ை எழுதுங்கள ்.

நீங்கள ் செய் ய வேண்டியத ு:

கீழ ே அளிக்கப்பட்டுள் ள பகுதியில ் உங்கள ் கருத்துக்கள ை பதிவ ு செய்யுங்கள ்,

அல்லத ு மின ் அஞ்சல ் வாயிலா க editor.tamil@webdunia.net அனுப்புங்கள ்,

அல்லத ு இணை ய தளத்தில ் தட்டச்ச ு செய் ய முடியாதவர்கள ் வெள்ளைத்தாளில ் ஆங்கிலம ் அல்லத ு தமிழில ் உங்கள ் கருத்துக்கள ை ஒர ு பக்கம ் மட்டும ் எழுத ி கீழ்கண் ட முகவரிக்க ு தபால ் அல்லத ு கூரியரில ் அனுப்பலாம ்:

The Editor - Tamil,
Webdunia.com(India)pvt. Ltd.,
No:2, Kriba Sankari Street,
West Mambalam,
Chennai 600 033.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தமுறை விடக்கூடாது!.. காங்கிரஸ் முடிவு!.. மு.க.ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன?..

உடல் ஐஸ்கட்டி போல உறைந்து மரணம்!.. போலி மருத்துவர் கைது!...

மகாராஷ்டிரா தேர்தலில் டிவிஸ்ட்!.. போட்டியின்றி 68 இடங்களில் பாஜக வெற்றி!..

வெனிசுலாஅதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது.. நாடு கடத்தப்பட்டதாக டிரம்ப் அறிவிப்பு!

மாசடைந்த குடிநீரை குடித்ததால் விபரீதம்.. 10 பேர் பலி.. மருத்துவமனையில் 200 பேர்..!

Show comments