Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல் கொள்முதல்- விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Webdunia
செவ்வாய், 13 ஜனவரி 2009 (13:17 IST)
அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உடனடியாக நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி வரும் நாளை (14 ஆம் தேதி) தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

கீழ்பவானி பாசனப் பகுதியில் தற்போது நெல் அறுவடை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு காஞ்சிக்கோயில ், நசியனூர ், அவல்பூந்துற ை, எழுமாத்தூர ், கொடுமுட ி, சிவகிர ி, வெள்ளோட ு, கே.ஜி.வலச ு, முத்தூர ், தாராபுரம ், புதுப்பை பகுதிகளில் நேரடி கொள்முதல் நிலையங்கள் துவக்க ி, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்திருந்தது.

ஆனால் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதியிலிருந்து இதுவரை விவசாயிகள் நெல் அறுவடை செய்தும ், அதை விற்க முடியாமல் தத்தளித்து வருகின்றனர்.

வெளிமார்க்கெட்டில் மிகக்குறைந்த விலைக்கே நெல் வாங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த துன்பத்திற்கும ், வேதனைக்கும் உள்ளாகியுள்ளனர்.

எனவ ே, உடனடியாக மேற்கண்ட இடங்களில் நெல் கொள்முதல் மையங்களைச் செயல்படச் செய்த ு, நெல்லைக் கொள்முதல் செய்ய வலியுறுத்தி வரும் 14 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

இப் பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்ட ு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்க மாநிலத் துணைத் தலைவர் சி.எம்.துளசிமண ி, மாவட்டத் தலைவர் பி.எஸ்.பழனிசாமி ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments