நெல் கொள்முதல்- விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Webdunia
செவ்வாய், 13 ஜனவரி 2009 (13:17 IST)
அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உடனடியாக நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி வரும் நாளை (14 ஆம் தேதி) தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

கீழ்பவானி பாசனப் பகுதியில் தற்போது நெல் அறுவடை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு காஞ்சிக்கோயில ், நசியனூர ், அவல்பூந்துற ை, எழுமாத்தூர ், கொடுமுட ி, சிவகிர ி, வெள்ளோட ு, கே.ஜி.வலச ு, முத்தூர ், தாராபுரம ், புதுப்பை பகுதிகளில் நேரடி கொள்முதல் நிலையங்கள் துவக்க ி, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்திருந்தது.

ஆனால் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதியிலிருந்து இதுவரை விவசாயிகள் நெல் அறுவடை செய்தும ், அதை விற்க முடியாமல் தத்தளித்து வருகின்றனர்.

வெளிமார்க்கெட்டில் மிகக்குறைந்த விலைக்கே நெல் வாங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த துன்பத்திற்கும ், வேதனைக்கும் உள்ளாகியுள்ளனர்.

எனவ ே, உடனடியாக மேற்கண்ட இடங்களில் நெல் கொள்முதல் மையங்களைச் செயல்படச் செய்த ு, நெல்லைக் கொள்முதல் செய்ய வலியுறுத்தி வரும் 14 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

இப் பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்ட ு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்க மாநிலத் துணைத் தலைவர் சி.எம்.துளசிமண ி, மாவட்டத் தலைவர் பி.எஸ்.பழனிசாமி ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த தாய்-மகன் கைது.. 4,200 போதை மாத்திரைகள் பறிமுதல்

சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மாற்றமில்லை.. திடீர் முடிவெடுத்த அதிகாரிகள்..!

விஜய்யுடன் கூட்டணி இல்லை.. திமுகவுடன் கூட்டணி தொடரும்.. காங்கிரஸ் மேலிடம் முடிவு?

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 24 மணி நேரத்தில் என்ன நடக்கும்?

தனிக்குடித்தனம் செல்லும் தம்பதிகளுக்கு கான்கிரீட் வீடு கட்டி தரப்படும்: ஈபிஎஸ் வாக்குறுதி..!

Show comments