பிப்ரவரி வரை காவிரியில் தண்ணீர் திறந்து விட கோரிக்கை

Webdunia
வியாழன், 8 ஜனவரி 2009 (11:14 IST)
அறந்தாங்க ி: பிப்ரவரி மாதம் வரை காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும ் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை அருகே உள்ள நாகுடியில் புதுக்கோட்டை மாவட்ட கல்லணைக் கால்வாய் விவசாயிகள் பாசனதாரர் கூட்டமைப்பின் கூட்டம் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில ், " கடந்த நவ. 25-ம் தேதி நடைபெற்ற கல்லணைக் கால்வாய் விவசாயிகள் பாசனதாரர் கூட்டமைப்புக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டபட ி, பின்தங்கிய குறுகிய கால நெல் பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்க ி, ஆவுடையார்கோவில ், மணமேல்குட ி, ஆலங்குடி ஆகிய வட்டங்களில் 30 ஆயிரம் ஏக்கர ், தஞ்சை மாவட்டம ், பேராவூரணி வட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் என மொத்தம் 80 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்த பயிர்களுக்கு பிப்ரவரி மாதம் வரை தண்ணீர் தேவைப்படுகிறது.

எனவ ே, மேட்டூரிலிருந்து தண்ணீர் திறப்பதை ஜனவரி 28-ம் நிறுத்த வேண்டும் என்ற அரசின் விதியைத் தளர்த்த ி, இந்தமுறை பிப்ரவரி மாதம் வரை காவிரியில் தண்ணீரைத் திறந்து விட வேண்டும்.

இதனை வலியுறுத்தி பொதுப் பணித் துறை அமைச்சர ், தலைமைப் பொறியாளர ், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

விஜய்க்கு சிபிஐ சம்மன்!.. போனாலும் பிரச்சனை... போகலானாலும் பிரச்சனை.. தளபதி சமாளிப்பாரா?!...

Show comments