Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு மாவட்டத்தில் கரும்பு வெட்டும் பணி துவக்கம்

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கரும்பு வெட்டும் பணி துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் தாலுக்காவில் சுமார் ஐந்து லட்சம் ஏக்கருக்கு மேல் கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்த கரும்புகள் அனைத்தும் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலைக்கும், ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலைக்கும் வெட்டப்படுகிறது. தற்போது பயிரிட்டுள்ள கரும்புகளில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் உள்ள கரும்புகள் அறுவடைக்கு தயாராகி வெட்டும் நிலையில் உள்ளது.

webdunia photoWD
இதற்கிடையில் கரும்பு விவசாயிகள் கரும்பு டன் ஒன்றுக்க ு இரண்டாயிரம் ரூபா‌ய ் வழங்ககோரி கரும்பு வெட்டு நிறுத்த போராட்டம் அறிவித்திருந்தனர். இதற்கிடையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஈரோடு மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர ் முன்னிலையில் ஆலை நிர்வாகிகளுக்கும ், கரும்பு விவசாயிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் தற்போது கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.1,260 கொடுக்க பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை நிர்வாகம் உறுதியளித்தது.

இது தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளை விட அதிகவிலை என்பதால் கரும்பு வெட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பான்மையான விவசாயிகள் தங்கள் கரும்புகளை ஆலைக்கு வெட்ட முடிவு செய்தனர்.

தற்போது சத்தியமங்கலம், பவானிசாகர ், தாளவாடி பகுதியில் விவசாயிகள் கரும்பு வெட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பணியின்றி இருந்த கரும்பு லாரிகள் மற்றும் டிராக்டர்கள் கரும்பு பாரம் ஏற்றி வரத்தொடங்கியுள்ளது.

இந்தியாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

Show comments