Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெலிங்டன் ஏரி திறப்பு

Webdunia
வெள்ளி, 12 டிசம்பர் 2008 (13:04 IST)
கடலூர ் : கடலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியான திட்டக்குடி வெலிங்டன் ஏரி புதன்கிழம ை, பாசனத்துக்குத் திறந்து விடப்பட்டது.

திட்டக்குடியை அடுத்த கீழச்செறுவாய் பகுதியில் அமைந்து இருப்பது வெலிங்டன் ஏரி. கடலூர் மாவட்டத்தின் வறண்ட பகுதிகளான திட்டக்குட ி, விருத்தாசலம் வட்டங்களைச் சேர்ந்த சுமார் 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இதனால் பாசன வசதி பெறுகின்றன. புயல் உருவாகாத நிலையில ், வெலிங்டன் ஏரி வறண்டு கிடந்தது.

வெலிங்டன் ஏரி பாசன பகுதி விவசாயிகளிடம், இந்த ஆண்டு ஏரி நிரம்புமா என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.

நிஷா புயல் காரணமாக பெய்த மழையால், வெலிங்டன் ஏரி நிரம்பியது. இந்த பகுதி விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

வெலிங்டன் ஏரியின் நீர் மட்டம் 24.5 அடியாக இருந்து. (முழு உயரம் 29.78 அடி). இந்த ஏரியின் கரை பலவீனமாக இருப்பதால ், முழுக் கொள்ளளவுக்குத் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியவில்லை.

வெலிங்டன் ஏரியில் இருந்து பானத்துக்குத் தண்ணீர் திறந்து விட்ட பிறகு, செய்தியாளர்களிடம் ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ கூறுகையில்,

அண்மையில் பெய்த மழையால் ஏரியில் 1,445 மில்லியன் கன அடி நீர் உள்ளது. ஏரியில் இருந்து முதல் 15 நாட்களுக்கு விநாடிக்கு 250 கனஅடி வீதமும ், பின்னர் 120 நாட்களுக்கு 105 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படும்.

உரம ், விதை உள்ளிட்ட வேளாண் இடுபொருள்கள் போதிய அளவு கையிருப்பு வைத்து இருக் க, வேளாண்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்தார்.

வெலிங்டன் ஏரிப் பாசனப் பகுதிகளில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஆழ்குழாய் கிணற்றுப் பாசனமாகவும் உள்ளது.

ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப் படுவதால், நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து, ஆழ்குழாய்க் கிணறுகளின் நீர் மட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷாவுடன் திமுக எம்பி திருச்சி சிவா திடீர் சந்திப்பு.. என்ன காரணம்?

ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து தவெக தலைவர் விஜய் கண்டனம்.. என்ன சொன்னார் தெரியுமா?

இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா? ஆம்ஸ்ட்ராங்க் கொலைக்கு சீமான் கண்டனம்..!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

Show comments