Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உரிய நஷ்ட ஈடு: மத்திய குழுவிடம் மனு

Webdunia
புதன், 10 டிசம்பர் 2008 (15:56 IST)
கடலூர ்: சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களைப் பார்வையிட கடலூர் மாவட்டத்துக்கு நேற்று மத்தியக் குழு வந்தது. இந்த குழுவினரிடம ், கடலூர் மாவட்ட விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை மனு அளித்தது.

இந்த கூட்டமைப்பின் தலைவர் வேங்கடபத ி, பொதுச் செயலாளர் ஏ.பி.ரவீந்திரன ், பொருளாளர் கார்மாங்குடி வெங்கடேசன ், தலைமை நிலையச் செயலாளர் பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பது:

வெள்ளச் சேதம். சிதம்பரம ், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தி இருக்கிறது. இரு வட்டங்களிலும் ஏரிகள்., குளங்கள் மற்றும் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதற்குத் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும்.

விருத்தாசலம ், கடலூர ், திட்டக்குட ி, பண்ருட்டி வட்டங்களிலும் மழையால் நெல ், கரும்ப ு, வாழ ை, மக்காச் சோளம ், பருத்த ி, மணில ா, மலர்ச் செடிகள ், காய்கறிகள ், கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.

எனவே மேற்படி வட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க அரசுக்கு மத்தியக் குழு பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

Show comments