Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழைகள் சேதம்: இழப்பீடு வழங்க கோரிக்கை

Webdunia
புதன், 10 டிசம்பர் 2008 (15:43 IST)
திருநெல்வேல ி : திருநெல்வேலி மாவட்டத்தில் சூறைக் காற்றால் வாழைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என பா. வேல்துரை எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வருக்கு, அனுப்பியுள்ள மனுவில், சேரன்மகாதேவி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கல்லிடைக்குறிச்ச ி, கரம்ப ை, வீரவநல்லூர ், கிரியம்மாள்புரம ், அத்தாளநல்லூர ், அரிகேசவநல்லூர ், திருப்புடைமருதூர ், கூனியூர ், காருகுறிச்ச ி, சேரன்மகாதேவ ி, அம்பாசமுத்திரம் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளங்குழி ஆகிய கிராமங்களில் கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி ஏற்பட்ட சூறாவளியால் சுமார் 20 லட்சம் வாழைகள் சேதமடைந்தன.

இந்த வாழைகள் அனைத்தும் வெட்டக் கூடிய பருவத்தில் இருந்ததால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தேன். ஆனால ், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவ ே, விவசாயிகளின் நிலையை கருத்தில்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

Show comments