Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் இரண்டு நாட்களில் மழை பெய்யலாம்

Webdunia
சனி, 6 டிசம்பர் 2008 (13:53 IST)
வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் இன்னும் இரண்டு நாட்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று மழை ராஜ் கூறியுள்ளார்.

மழை ராஜ், மழை பற்றி ஆய்வு செய்து அனுப்பிய கடிதத்தில், 2008 டிசம்பர் மாதம் 5ஆம் தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், நாகைக்கும், கடலூருக்கும் இடைப்பட்ட பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடையும் சூழல் உள்ளது.

இதனால் நாகை, கடலூர், புதுச்சேரி, சென்னை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கன மழையும், தமிழகத்தின் இதர மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இதனால் தமிழகத்தில் 8 அல்லது 9ஆம் தேதி முதல் மழை துவங்கி 16ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

16 ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் மழை குறைவதற்கு வாய்ப்புள்ளது.

மேலும் நிலநடுக்க தேதியின் கணிப்பின்படி டிசம்பர் மாதம் 8, 14, 22, 28 ஆகிய தேதிகளில் மிதமானது முதல் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

Show comments