Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களவை முன் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Webdunia
சனி, 6 டிசம்பர் 2008 (10:15 IST)
ஈரோட ு: மக்களவை முன்பு கரும்பு விவசாயிகள் 10 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

கரும்பு விவசாயிகள் பிரச்னை தீரும் வரை கரும்பு வெட்டுவதில்லை என்றும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்பு குழு முடிவு செய்துள்ளது.

விவசாயிகள் இதில் உறுதியாக இருக்க வேண்டுமென அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பி.காசியண்ணன் விடுத்துள்ள அறிக்கையில், கரும்பு டன்னுக்கு ரூ.2 ஆயிரம் வழங்ங்குவது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள கரும்பு விவசாயிகள ், " சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வெட்டுவதில்ல ை' என்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கெனவே ஆர்ப்பாட்டம ், உண்ணாவிரதப் போராட்டங்களும் நடத்தப்பட்ட ு, வேளாண்துறை அமைச்சரிடம் மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல ், கடந்த 1-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அதில் கலந்து கொண்ட விவசாயிகள ், ஆலை நிர்வாகம் அறிவித்த ரூ.25 விலை உயர்வு மற்றும் சலுகைகளை ஏற்காமல ், கூட்டத்தைவிட்டு வெளிநடப்பு செய்துள்ளனர்.

சக்தி சர்க்கரை ஆலை மட்டுமல்லாத ு, பண்ணார ி, ஈஐடி பாரி உள்ளிட்ட சர்க்கரை ஆலைகளுக்கும் கரும்பை வெட்டுவதில்லை என்ற முடிவு தொடரும்.

வருகின்ற 10 ஆம் தேதி டில்லியில் மக்களவை முன ், தேசிய அளவிலான கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆலைகளுக்கும் போராட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் விழுப்புரத்தில் சனிக்கிழமை விவசாய சங்கத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில் பல்வேறு போராட்டங்கள் குறித்து முடிவு செய்யப்படும்.

எனவே ஆலை நிர்வாகங்களின் சூழ்ச்சிகள ், பிரித்தாளும் நடவடிக்கைகளுக்கு கரும்பு விவசாயிகள் ஆளாகிவிடாமல ், கூடுதல் விலை கிடைக்கும்வரை ஆலைகளுக்கு கரும்பு வெட்டுவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.

டில்லி போராட்டத்துக்குப் பின்னர் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட ி, விவசாயிகளின் கருத்தை அறிந்த ு, அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

Show comments