மேட்டூர் அணை தண்ணீர் திறந்து விடுவது குறைப்பு!

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2008 (12:35 IST)
திருச்ச ி: மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பகுதிகளுக்காக திறந்து விடப்படும் தண்ணீர் அளவு நேற்று மாலையில் இருந்து விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

காவிரி பாசன பகுதி விவசாய பணிக்காக, கடந்த இரண்டு வாரங்களாக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இது புதன்கிழமை மாலை 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்று மேலும் 2 ஆயிரம் கன அடியை குறைத்து, வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி திறந்து விடப்படுகிறது.

மேட்டுர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 72.78 அடியாக இருந்தது. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி.

அணைக்கு விநாடிக்கு 5,842 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 8,746 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1,710 கன அடி, வென்னாற்றில் விநாடிக்கு 7,202 கன அடி, கல்லணை கால்வாயில் விநாடிக்கு 3,004 கன அடி, கொள்ளிடம் கால்வாயில் விநாடிக்கு 1,191 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது வேற லெவல். வெளங்குமடா தமிழ்நாடு: தவெகவை நக்கலடித்த ப்ளுசட்டை மாறன்

சனிப்பெயர்ச்சி விழா.. விழுப்புரத்திலிருந்து திருநள்ளாறுக்கு சிறப்பு ரயில்.. முழு விவரம்..!

இன்னும் 100 வருஷம் ஆனாலும் காங்கிரஸ் அதிகாரத்திற்கு வராது.. கடைசி வரை அடிமையாக இருங்க.. தவெகவினர் கிண்டல்..!

அமெரிக்காவுக்கு உதவும் நாடுகளையும் தாக்குவோம்.. அஜர்பைஜான் விமான நிலையத்தை தாக்கிய ஈரான்..!

இந்தியாவின் விருந்தினரை தாக்குவதா?!.. திமிருக்கு முடிவு கட்டுவோம்!.. அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்..

Show comments