Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பிரதேசத்தில் சாகுபடி அளவு பாதிப்பு!

Webdunia
வெள்ளி, 7 நவம்பர் 2008 (15:47 IST)
போபால ்: மத்திய பிரதேசத்தில் மழை சரியான அளவு பெய்யாததால், உணவு சாகுபடி செய்யும் பரப்பளவு குறையும் என்று தெரிகிறது.

மத்திய பிரதேசத்தில் அதிக அளவு கோதுமை சாகுபடி செய்யும் இந்தூர், உஜ்ஜய்ன், போபால் மண்டலங்களில் சரியான அளவு மழை பெய்யவில்லை. இதனால் இந்த மண்டலங்களில் கோதுமை, பட்டாணி, மைசூர் பருப்பு, பார்லி உட்பட உணவு தானியங்கள் சாகுபடி செய்யும் அளவு குறையும்.

இந்த ரபி பருவத்தில், இது வரை 27 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே விதைப்பு நடைபெற்றுள்ளது, இது சாகுபடி செய்ய நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 31 விழுக்காடு மட்டுமே.

கோதுமை 4.22 லட்சம் ஹெக்டேர், சிறு பருப்பு 10.61 லட்சம் ஹெக்டேர், பட்டாணி 1.47 லட்சம் ஹெக்டேர், மைசுர் பருப்பு 3.10 லட்சம் ஹெக்டேர், பார்லி 17 ஆயிரம் ஹெக்டேர், மற்ற தானியங்கள் 23 ஆயிரம் ஹெக்டேரில் மட்டுமே விதைப்பு நடந்துள்ளது.

கரும்பு 10 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ளது

மத்திய பிரதேசத்தில் ரபி பருவத்தில் 86.28 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்படும். சென்ற ஆண்டு 76,82 லட்சம் ஹெக்டேரில் தான் உணவு தானியங்கள் சாகுபடி செய்யப்பட்டன.

இந்த வருடம் மழை போதிய அளவு இல்லாததால், சாகுபடி செய்யும் பரப்பளவு குறையும் என்று தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும்..! முதல்வர் ஸ்டாலின் உறுதி.!!

மீண்டும் தங்கம் விலை 500 ரூபாய் உயர்ந்ததா? சென்னையில் இன்றைய நிலவரம்..!

ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கல் தான் ஆம்ஸ்ட்ராங் கொலையா? தீவிர விசாரணை..!

அமித்ஷாவுடன் திமுக எம்பி திருச்சி சிவா திடீர் சந்திப்பு.. என்ன காரணம்?

ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து தவெக தலைவர் விஜய் கண்டனம்.. என்ன சொன்னார் தெரியுமா?

Show comments