Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண்ணெய் வித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை!

Webdunia
புதன், 22 அக்டோபர் 2008 (14:25 IST)
கோவ ை: விவசாயிகளிடம் இருந்து எண்ணெய் வித்துக்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன் மாநில தலைவர் டி.வேலாயும் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணெய் வித்துக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 7.75% இறக்குமதி வரியை, மத்திய அரசு குறைத்ததுள்ளது. அத்துடன் தாவர எண்ணெய்களின் மீதான இறக்குமதி வரியையும் முழுவதும் ரத்து செய்துள்ளது.

இதனால் முந்தைய ஆண்டுகளைவிட 2007-08 ஆம் ஆண்டில் இது வரை இல்லாத அளவிற்கு 70 லட்சம் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலை குறைந்து வருவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.

அரசு எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு அதிக சலுகைகள் அளித்து விளைச்சலை ஊக்குவிக்க வேண்டும். அத்துடன் விவசாயிகளிடம் இருந்து, எண்ணெய் வித்துக்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் ஓட்டுனர்களை சந்தித்து குறைகள் கேட்ட ராகுல் காந்தி.. இந்த யோசனை யாருக்கும் வரவில்லையே..!

இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு..!

சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை..! வி.சி.க. - காங்கிரஸ் குற்றச்சாட்டு.!!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திருமாவளவன் கண்டனம்..! குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரிக்கை..!!

பகுஜன் சமாஜ் கட்சியின் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. கமல்ஹாசன் இரங்கல்..!

Show comments