Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம்!

Webdunia
செவ்வாய், 14 அக்டோபர் 2008 (13:55 IST)
தென்காச ி: தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க ஆகும் செலவில் அரசு 50 விழுக்காடு மானியம் வழங்குகிறது என்று தென்காசி தோட்டக்கலை உதவி இயக்குநர் சே.மதியழகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது.

பழமரங்கள ், காய்கற ி, மலர், வாசனை திரவிய பயிர்கள், தென்ன ை, கரும்பு போன்றவற்றை பயிர் செய்யும் விவசாயிகள், இந்த பயிர்களுக்கு தேவைப்படும் நீர்ப்பாசனத்திற்காக, சொட்டுநீர் பாசன வசதி அமைப்பதற்கு அரசு 50 விழுக்காடு மானியம் வழங்குகிறது.

இதை அமைக்க ஆகும் செலவில் மீதமுள்ள 50 விழுக்காடு தொகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் கடனாகவும் வழங்கப்படுகிறது.

சொட்டுநீர் பாசனம் அமைப்பதால ், தண்ணீர் இல்லாமல் பயிர் வாடுவதை தவிர்த்து தேவைகேற்ப நீர்ப்பாசனம் செய்திடலாம்.

தோட்டக்கலை துறை மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க மாமரம், நெல்ல ி, கொய்ய ா, எலுமிச்சை, முந்திரி, வாழ ை, மலர்கள ், கரும்புப், நறுமண மூலிகை பயிர்கள் ஆகியவைகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

சொட்டுநீர் பாசன வசதி செய்ய விரும்பும் தென்காசி வட்டார விவசாயிகள், தென்காசி உழவர்சந்தை வளாகத்திலுள்ள தோட்டக் கலை உதவி இயக்குநரை சந்தித்து பயன்பெறலாம் என்று கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments