Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 2,500 வழங்க வலியுறுத்தல்!

Webdunia
புதன், 1 அக்டோபர் 2008 (17:30 IST)
தஞ்சாவூர ் : 2008-09 ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும் என்று குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை இந்த சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் எஸ். ராமநாதன் தலைமை வகித்தார்.

இதில் கரும்பு விலையை டன்னுக்கு ரூ.2,500 ஆக உயர்த்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில், பதிவு செய்யப்பட்ட கரும்புப் பயிர் தீ விபத்தால் பாதிக்கப்பட்டால ், பாதிப்பு ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள் எவ்வித தடையுமின்றி ஆலை நிர்வாகமே கரும்புகளை ஆலைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

அய்யம்பேட்ட ை, திருவையாறு கோட்டங்களை ஆலையின் பதிவு பரப்புக்கு உட்பட்டே செயல்படச் செய்ய வேண்டும்.

இப்பகுதியில் தனியார் ஆலைகள் கரும்பு எடுக்க அனுமதிக்க கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் பொதுச் செயலர் ஆர். திருப்பத ி, சுவாமிமலை சுந்தரவிமல்நாதன ், வீ. தருமராஜன் உள்ளிட்ட கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments