பயிர் சிகிச்சை மையங்கள்!

Webdunia
செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (17:48 IST)
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் வேளாண்மை பட்டதாரிகள் சிறிய மண் பரிசோதனைக் கூடத்துடன் கூடிய பயிர் சிகிச்சை மையங்களை அமைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்த பயிர் மருத்துவமனைகளை அமைக்க வேலையில்லாத வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் தெரிவித்தார்.

அவர் இது குறித்து கூறுகையில், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பயிர் சிகிச்சை மையங்கள் தலா ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். இதற்கென வணிக வங்கி கடனுதவியுடன் 50 விழுக்காடு மானியமும் வழங்கப்படும்.

இப் பயிர் சிகிச்சை மையங்களில் மண் பரிசோதனை செய்வதுடன், பயிர் தேர்வ ு, இடுபொருள்கள ், பண்ணை தொழில்நுட்பங்கள ், விளைபொருட்களை மதிப்பு கூட்டுதல ், விற்பன ை, பயிர்க் காப்பீடு மற்றும் பயிர்க் கடன் பெறுதல் போன்றவை தொடர்பாக ஆலோசனைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

பயிர் சிகிச்சை மையங்கள் அமைக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் மற்றும் கமுதி வட்டாரத்தைச் சேர்ந்த வேளாண் பட்டதாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சிபெற்ற இந்த வேளாண் பட்டதாரிகள் விரைவில் பயிர் சிகிச்சை மையங்களை அமைக்க உள்ளனர்.

மாவட்டத்தில் இதர வட்டாரங்களான மண்டபம ், திருப்புல்லாண ி, திருவாடான ை, ஆர்.எஸ். மங்கலம ், பரமக்குட ி, நயினார்கோவில ், போகலூர ், கடலாடி வட்டாரத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற வேளாண் பட்டதாரிகள ், பணி ஓய்வுபெற்ற 3 ஆண்டுகள் கடந்த வேளாண் பட்டதாரிகளும் அந்தந்தப் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களிடம் பயிர் சிகிச்சை மையங்களை அமைக்க விண்ணப்பிக்கலாம் என ஆர்.கிர்லோஷ்குமார் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனிதர்கள் இதுவரை பார்க்காத நிலவின் அற்புதமான புகைப்படம்.. Artemis II திட்டத்தில் சாதனை..!

ராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை.. விவசாயிகள் சோகம்..!

ஈரானில் சிக்கித் தவித்த 345 இந்திய மீனவர்கள்.. ஆர்மீனியா வரை சாலை பயணம்.. பின்னர் விமானத்தில் சென்னை வருகை..!

விஜய் வேட்புமனுவில் மீண்டும் குளறுபடி.. ஒரே வாரத்தில் 6 கோடி ரூபாய் சொத்து மதிப்பு உயர்ந்ததா?

சிந்திக்கும் இளைஞர்கள் கூட்டம் திமுக பக்கமே உள்ளனர்.. அமைச்சர் மா சுப்பிரமணியன்

Show comments