Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு மாவட்டத்தில் தக்காளி விலை அதிகரிப்பு!

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி!

Webdunia
வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (12:03 IST)
ஈரோடு மாவட்டத்தில் தக்காளி விலை திடீரென அதிகரித்துள்ளதால் பெண்கள் விரக்தியடைந்துள்ளனர்.

குடும்ப பெண்கள் தங்கள் சமையலுக்கு சுவைசேர்ப்பதற்கு முக்கிய பங்கு வகிப்பது தக்காளி பழம். சாம்பார், ரசம் என அனைத்திலும் தக்காளியின் பங்கு கட்டாயம் இருக்கும். இந்த தக்காளியின் விலை தங்கம்போல் ஆகிவிட்டது. ஆம் எப்போது குறைகிறது, எப்போது உயர்கிறது என தெரியவில்லை.

கடந்த வாரம் ஈரோடு மாவட்டத்தில் தக்காளி ஒரு கிலோ ரூ.10 ஆக இருந்தது. இதற்கு முன் மாதம் கிலோ ரூ.4 க்கு விற்பனையானது. தற்போது இதே தக்காளி பழம் கிலோ ஒன்று ரூ.18 முதல் ரூ.20 வரை விற்பனையாகிறது. இதன் காரணமாக உணவு விடுதிகளில் தக்காளி சட்டினிக்கு தடை விதித்துள்ளனர்.

குடும்ப பெண்களும் தக்காளியை பயன்படுத்தும் அளவை வெகுவாக குறைத்து விட்டனர். கடந்த சில வாரங்களாக ஈரோடு மாவட்டத்தில் பெய்த தொடர்மழையே தக்காளியின் விலையேற்றத்திற்கு காரணம் என்கின்றனர் வியாபாரிகள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments