விவசாயத்திற்கு மின்சாரம்- அரசுக்கு கோரிக்கை!

Webdunia
செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (11:31 IST)
விவசாய பணிக்காக 14 மணி நேரம் இடைவிடாது மின்சாரம் வழங்க வேண்டும் என்று பாரதீய விவசாயிகள் சங்கம் [ Bharatiya Kissan Sangh (BKS)] தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த சங்கத்தின் பொதுச் செயலர் அய்யாக்கண்ணு, விவசாயிகளுக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரி தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

அதில், மின்சாரம் தடைபடுவதால் நீர் பாய்ச்ச முடியாமல் போகும். இதனால் வளர்ந்துள்ள நெற் பயிர்கள் வாடிப்போய்விடும். ஏற்கனவே பல காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்பால், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்ம் ரூ.7 ஆயிரம் வரை நஷ்டமாகும்.

தொழில் துறையை சேர்ந்த நிறுவனங்களை ஜெனரேட்டர் பயன்படுத்தி, அவர்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளுமாறு கூற வேண்டும். இதனால் சேமிக்கப்படும் மின்சாரத்தை விவசாய பணிகளுக்கு வழங்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை.. இறப்பதற்கு முன் செய்த அதிர்ச்சி செயல்..!

பள்ளி மாணவர்களை தொழுகை செய்ய சொன்ன தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்.. அதிரடி நடவடிக்கை

ராகுல் காந்தி ராணுவத்தை அவமதித்தாரா? பிரியங்கா காந்தி விளக்கம்

திருச்சியில் திகில்: கல்லறையில் இருந்து வந்த பிரியாணி ஆர்டர் - அலறியடித்து ஓடிய டெலிவரி பாய்!

தம்பி விஜய்க்கு ஒன்னும் தெரியல!.. நயினார் நாகேந்திரன் பேட்டி!...

Show comments