Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் மாத‌த்‌தி‌ல் விவசாய கடன் தள்ளுபடி அமல்!

Webdunia
வியாழன், 10 ஏப்ரல் 2008 (16:52 IST)
மத்திய அரசு அறிவித்துள்ள விவசாய கடன் தள்ளுபடி திட்டம் ஜூன் மாதத்தில் இருந்து அமல்படுத்தப்படும் என்று நபார ்டு வங்கி தலைவரும் மேலாண்மை இயக்குநருமான யூ.சி. சாராங்கி தெரிவித்தார்.

மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் சென்ற பிப்ரவரி 29 ந் தேதி மக்களவையில் சமர ்‌ப ்பித்த பட்ஜெட்டில் ரூ.60 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும என்று அறிவித்தார்.

இது குறித்து நபார்டு என்று அழைக்கப்படும் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி தலைவரும் நிர்வாக இயக்குநருமான யூ.சி. சாரங்கி கூறுகையில், இந்த வருடம் கடன் தள்ளுபடி செய்ய நிச்சயிக்கப்பட்ட ஜூன் மாதத்தில் கடன் தள்ளுபடி செய்யப்படும் இதற்கு தேவையான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

நபார்டு வங்கி, கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. கடந்த வருடம் புதிதாக 30 லட்சம் விவசாயிகள் கடன் அட்ட ை ( கிசான் கிரடிட் கார்ட ்) வழங்கப்பட்டுள்ளன. இது வரை மொத்தம் ஏழு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இ‌‌தி‌ல் பாதிக்கும் அதி கம ானவைகள் கூட்டுறவு வங்கிகளால் வழங்கப்பட்டுள்ளன.

2007-08 நிதி ஆண்டில் நபார்டு வங்கியின் விற்று முதல் ரூ.98,500 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய வருடத்தைவிட 21 விழுக்காடு அதிகம் என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவில் இன்னொரு ஏஐ அறிமுகம்.. ஒரே வாரத்தில் ஓரம் கட்டப்பட்டதா டீப் சீக்?

இன்றும் காந்திஜி தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா? தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி கேள்வி..!

புலியின் சிறுநீரில் மருத்துவ குணம்.. முடக்கு வாதத்தை குணமாக்கும் என கூறி விற்பனை..!

மன்னிப்பு கேட்ட கல்லூரி மாணவிக்கு முத்தம் கொடுத்த இளைஞர்.. கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்..!

மோடியும் கெஜ்ரிவாலும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள்.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

Show comments